வாலிபரை கொன்று கால்வாயில் உடல் வீச்சு: பிரபல ரவுடி உள்பட 2 பேர் கைது!!

Read Time:1 Minute, 16 Second

e02ef7cb-761c-49a5-9e6d-508b2ee5f9b0_S_secvpfமைசூரு நகரில் படுவாரஹள்ளி 5-வது தெருவில் வசித்து வந்தவர் ராகவேந்திரா (வயது 23). இவர், கடந்த 21-ந் தேதி மைசூரு மகாராணி கல்லூரி பின்புறம் உள்ள கால்வாயில் ரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார்.

இதுகுறித்து, ஜெயலட்சுமி புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். மேலும் கொலையாளிகளை போலீசார் தேடிவந்தனர். விசாரணையில், ராகவேந்திராவை படுவாரஹள்ளியை சேர்ந்த பிரபல ரவுடியான சீனா என்ற சீனிவாசா, பாலு ஆகியோர் இன்னொருவருடன் சேர்ந்து முன்விரோதம் காரணமாக கொலை செய்து இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, சீனிவாசா, பாலு ஆகிய இருவரையும் ஜெயலட்சுமி புரம் போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள இன்னொருவரை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கணவர் தியாகுவுக்கு எதிராக கவிஞர் தாமரையின் தர்ணா போராட்டம் வேளச்சேரிக்கு மாற்றம்!!
Next post ரசிகர்களின் வரவேற்பை பெற்ற மணிரத்னத்தின் ஒ காதல் கண்மணி டிரைலர்!!