ஓடும் ஆட்டோவில் இருந்து கீழே குதித்து காமுகர்களின் பிடியில் இருந்து தப்பிய இளம்பெண்கள்!!
மராட்டிய மாநிலம், தானே மாவட்டத்தில் உள்ள பிவாண்டி பகுதியில் நேற்று மாலை அகில பாரத வித்யார்தி பரிஷத் (தேசிய மாணவர் அமைப்பு) நடத்திய ஒரு விழாவில் பங்கேற்க சென்ற சரிகா பாட்டீல்(22), பிரதிஷ்கா பவுர்னிக்(17) ஆகியோர் வீடு திரும்புவதற்காக இரவு சுமார் 9 மணியளவில் மஹ்லிர் திரையரங்கம் அருகே ஒரு ஆட்டோவில் ஏறினர்.
கேட்பரி சந்திப்பை நெருங்கியபோது, அவர்கள் கூறிய பாதையை தவிர்த்து மாற்றுப்பாதையை நோக்கி ஆட்டோவை வேகமாக ஓட்டிய டிரைவர், அந்த பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார். உஷாரடைந்த அவர்கள் இருவரும் தங்களது கற்பை பாதுகாத்துக்கொள்ள ஓடும் ஆட்டோவில் இருந்து கீழே குதித்தனர்.
இதில் படுகாயமடைந்ததால் ஜூபிடர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ள அவர்களை நேரில் சந்தித்த போலீஸ் துணை கமிஷனர் பாதிக்கப்பட்டவர்கள் அளித்த வாக்குமூலத்தை பதிவு செய்து, தப்பியோடிய ஆட்டோ டிரைவரை தேடிப்பிடித்து கைது செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார்.
Average Rating