தாய்க்கு இறுதிச்சடங்கு செய்த மகள் அடித்துக்கொலை: சகோதரர் வெறிச்செயல்!!

Read Time:2 Minute, 49 Second

f0ebc6ef-9c30-468f-997b-4052733ddc1f_S_secvpfஜார்க்கண்ட் மாநிலம் ராய்ப்பூர் மாவட்டத்தில் உள்ள மோக்தா கிராமத்தை சேர்ந்தவர் கீதா பிரகலாத். இவர் ஊர் பஞ்சாயத்து தலைவியாக இருந்து வந்தார்.

இவரது தாய் சுர்ஜூபாய். இவருக்கு கீதா தவிர சந்தோஷ் என்ற ஒரு மகனும் இருக்கிறார். அவர் திருமணமாகி மனைவி குழந்தைகளுடன் தனியாக சென்று விட்டார். இதனால் தாயை கீதா கவனித்து வந்தார்.

இந்த நிலையில் நோய் வாய்ப்பட்டு கிடந்த தாய் சுர்ஜூபாய் கடந்த மார்ச் மாதம் 31–ந்தேதி மரணம் அடைந்து விட்டார். பாரம்பரிய வழக்கப்படி தாய்க்கு மகன்தான் இறுதிச்சடங்கு செய்ய வேண்டும்.

ஆனால் தன்னை மகன் வெறுத்து விட்டதால் அவன் இறுதிச்சடங்கு செய்யக்கூடாது மகள் தான் தனக்கு இறுதிச்சடங்கு செய்ய வேண்டும் என்று சாகும் முன் தனது இறுதி ஆசையாக கூறினார். அதன்படி தாயின் சிதைக்கு கீதா இறுதிச்சடங்கு செய்தார்.

இது சந்தோசுக்கு மன உறுத்தலை ஏற்படுத்தியது. தாய் இறந்த 2 நாட்கள் கழித்து ஆத்திரம் பொங்கி எழுந்த நிலையில் சந்தோஷ் தனது மகன் பியூசுடன் கீதா விட்டுக்கு வந்தார். அங்கு அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.

அப்போது சந்தோசும், பியூசும் சேர்ந்து கீதாவை சரமாரியாக அடித்துக்கொன்றனர். அத்துடன் ஆத்திரம் தணியாமல் மற்றொரு சகோதரி சீதா, கீதாவின் கணவர் அனிகுத்தா சிங் ஆகியோரையும் கொலை செய்யும் நோக்கத்துடன் இருவரையும் தேடினார்கள். அதற்குள் போலீசார் விரைந்து வந்து சந்தோஷையும், அவரது மகன் பியூஷையும் கைது செய்தனர்.

கீதா 2 மாதத்துக்கு முன்பு தான் அந்த கிராமத்தில் நடந்த பஞ்சாயத்து தேர்தலில் வெற்றி பெற்று பஞ்சாயத்து தலைவர் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.

கீதாவுக்கு குஷ்பு என்ற 19 வயது மகளும், விக்ரம் என்ற மகனும் உள்ளனர். கீதாவை சந்தோஷ் தாக்கிய போது அதை தடுத்த குஷ்புவும் காயம் அடைந்தார். அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கீதை போட்டியில் முதல் பரிசு வென்ற மரியம் ஆசிப் சித்திக்கிக்கு உ.பி.அரசு சார்பில் பாராட்டு விழா!!
Next post பெங்களூருவில் மாணவியை சுட்டுக் கொன்றவருக்கு 10-ந்தேதி வரை போலீஸ் காவல்!!