மதுரை அரசு ஆஸ்பத்திரியில் விசாரணை கைதி சாவு: நீதிபதி விசாரணை!!
Read Time:1 Minute, 6 Second
மதுரை மதிச்சியம் சப்பாணிக் கோவில் தெருவை சேர்ந்தவர் அழகர் (வயது45). கடந்த ஆண்டு பாலியல் பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்ட அவர் மதுரை சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில் அழகருக்கு திடீர் என நெஞ்சுவலி ஏற்பட்டதாக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இது குறித்து அரசு ஆஸ்பத்திரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதற்கிடையில் விசாரணை கைதி அழகரின் இறப்பு குறித்து குற்றவியல் நீதிமன்ற நீதிபதி, ஆஸ்பத்திரிக்கு வந்து சிகிச்சை அளித்த டாக்டர், சிறைத்துறை அலுவலர்கள் மற்றும் அழகரின் உறவினர்கிடம் விசாரணை நடத்தினார்.
Average Rating