குரங்குகள் தாக்கியதால் மாடியில் இருந்து விழுந்து உயிர் இழந்த பெண்!!
Read Time:1 Minute, 9 Second
உத்தரபிரதேச மாநிலம் மதுரா நகரில் பிருந்தாவனம், கோவர்தன் போன்ற பகுதிகளில் குரங்குகள் தொல்லை அதிகமாக உள்ளது.
இந்த நிலையில் நேற்று கோவிந்த்பாக் என்ற இடத்தில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பு பகுதிக்குள் குரங்குகள் கூட்டமாக புகுந்து அட்டகாசம் செய்தன. அப்போது ஒரு வீட்டில் இருந்த அஞ்சலி (வயது 52) என்ற பெண்ணை குரங்குகள் தாக்கின. குரங்குகளிடம் இருந்து தப்பிக்க முயன்ற போது அந்த பெண் மாடியில் இருந்து தவறி விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவர் பரிதாபமாக உயிர் இழந்தார். கடந்த 3 மாதங்களில் இது 2-வது சம்பவமாகும்.
இதை கண்டித்தும் குரங்குகளை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க கோரியும் அப்பகுதி மக்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Average Rating