காரமடையில் கள்ளக்காதல் விவகாரத்தில் கண்டக்டர் கொலை!!

Read Time:3 Minute, 0 Second

28b18baa-8eed-4b40-b716-9ce0a5fc9b6a_S_secvpfகாரமடை குட்டையூரை சேர்ந்தவர் அருள்தாசின் மகன் பிரான்சிஸ் (வயது 30). தனியார் பஸ் கண்டக்டர். இவருக்கு கிருத்திகா என்ற மனைவியும், ஒரு மகளும் உள்ளனர்.

இந்நிலையில் பிரான்சிஸ் கடந்த 12–ந்தேதி காரமடை குப்பை கிடங்கு அருகே உள்ள சாக்கடையில் பிணமாக கிடந்தார். காரமடை போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் சம்பவ இடத்துக்கு சென்று பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்.

பிரேத பரிசோதனை அறிக்கையில் பிரான்சிஸ் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. கொலை வழக்குப்பதிவு செய்த போலீசார் கொலையாளிகளை தேடி வந்தனர். மேட்டுப்பாளையம் பகுதியில் சந்தேக நபர்களை பிடித்து விசாரணை நடத்தினர். எனினும் உண்மை குற்றவாளிகள் சிக்கவில்லை.

இந்நிலையில் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த கலிபுல்லா மகன் அகமது ரசூல் (30) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பிரான்சிசை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். அகமது ரசூலுக்கு பைரோஜ என்ற மனைவியும் 2 பெண் குழந்தைகளும் உள்ளனர். சமீபத்தில் பைரோஜா இறந்து விட்டார். அகமது ரகசூல் அவரது தந்தை நடத்தும் பர்னிச்சர் கடையில் வேலை செய்து வந்தார்.

இந்நிலையில் அகமது ரசூலுக்கும் பிரான்சிஸ் மனைவி கிருத்திகாவுக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டது. இது குறித்து பிரான்சிஸ்சுக்கு தெரிந்ததும் இருவரையும் கண்டித்தார். ஆனால் நாங்கள் தவறான எண்ணத்தில் பழகவில்லை என்ற 2 பேரும் மறுத்தனர்.

கள்ளக்காதலுக்கு இடையூறாக உள்ள பிரான்சிசை கொலை செய்ய அகமது ரசூல் திட்டமிட்டார். அதன்படி சம்பவத்தன்று மது அருந்த அகமது ரசூல் கண்டக்டர் பிரான்சிசை அழைத்துச்சென்றார்.

போதை தலைக்கு எறியதும் பிரான்சிஸ்சின் கழுத்தை நெரித்துக்கொலை செய்து கொலை செய்து அருகில் உள்ள சாக்கடையில் வீசினார். மேற்கண்ட தகவல் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

கைது செய்யப்பட்ட அகமது ரசூல் சிறையில் அடைக்கப்பட்டார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post புதுக்கோட்டையில் நண்பரின் மனைவியுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த வாலிபருக்கு அரிவாள் வெட்டு!!
Next post லஞ்சம் வாங்கி கைதான பெண் சர்வேயர் சிறையில் அடைப்பு!!