குற்றங்கள் குறைய சூலூர் போலீஸ் நிலையத்தில் கிடா வெட்டி பரிகார பூஜை: பொதுமக்கள் அதிர்ச்சி!!

Read Time:2 Minute, 9 Second

5321c27d-5c72-4750-963e-deefc9db0e9d_S_secvpfசூலூர் போலீஸ் நிலையம் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட கட்டிடம் ஆகும். தற்போது சிறிது அளவு சிதிலமடைந்ததால் அதன் அருகிலேயே புதிய கட்டிடம் கட்டி திறப்பு விழா நடைபெற்றது. இந்த புதிய கட்டிடத்தில் தற்போது சூலூர் போலீஸ் நிலையம் இயங்கி வருகிறது.

இந்த போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட எல்லைப்பகுதி அதிகமாக இருப்பதாகவும், குற்றங்கள் அதிகரித்து உள்ளதாகவும், விபத்துக்கள், வழக்குப்பதிவு எண்ணிக்கை அதிகரித்து உள்ளதாகவும் போலீசார் கூறுகின்றனர். அதிக வேலைப்பளு காரணமாக போலீசார் மனஉளைச்சலுக்கு ஆளாகி என்ன செய்வதென்று தெரியாமல் குழம்பி இருந்தனர்.

இந்த நிலையில் உள்ளூர் பிரமுகரின் ஆலோசனைப்படி கிடா வெட்டி பூஜை நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டதாக தெரிகிறது. அதன்படி இன்ஸ்பெக்டர் மற்றும் சப்–இன்ஸ்பெக்டர்கள் சேர்ந்து பரிகார பூஜை செய்ய நடவடிக்கை எடுத்தனர்.

அதன்படி நள்ளிரவு 12 மணிக்கு கிடா வெட்டி பரிகார பூஜை செய்து பின்னர் ஆட்டின் ரத்தத்தை போலீஸ் நிலைய கட்டிடத்தில் தெளித்து, கிடா தலையை போலீஸ் நிலையம் முன்பு புதைத்துள்ளதாக தகவல் வெளியாகி இருககிறது. இது மிகவும் ரகசியமாக நடைபெற்றுள்ளது.

சூலூர் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 2 சந்தேக மரணங்களும், 2 சாலை விபத்துக்களும் ஏற்பட்டுள்ளன. எனவே பரிகார பூஜை நடத்தி பலனில்லாமல் போய்விட்டதோ என்று போலீசார் கலக்கத்தில் உள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 10 ஆண்டுகளாக இருட்டறையில் அடைந்து கிடந்த சகோதரிகள்: தன்னார்வ தொண்டு அமைப்பினர் மீட்டனர்!!
Next post காதலன் ரூ.5 லட்சம் கேட்டதால் விஷம் குடித்து காதலி தற்கொலை!!