திருமண விழாவில் நடனம் ஆட மறுத்த பெண் சுட்டுக்கொலை!!

Read Time:1 Minute, 21 Second

b3acf843-3070-40ce-887b-9432a81aecd3_S_secvpfமேற்கு வங்காளத்தை சேர்ந்த பெண் நடனக்கலைஞர் பியூ (வயது 23). திருமண விழா போன்றவற்றின் போது நடைபெறும் கலைநிகழ்ச்சியில் கலந்து கொண்டு நடனம் ஆடுவார்.

இந்த நிலையில் உத்தரபிரதேச மாநிலம் பாலியா மாவட்டத்தில் நடைபெற்ற திருமண விழா ஒன்றின் கலைநிகழ்ச்சியில் கலந்து கொண்டு நடனமாடினார். அப்போது பார்வையாளர்கள் தங்களது தாய் மொழி பாடல் ஒன்றுக்கு அவரை நடனமாடும் படி கூறினர். அதனை பெண் நடன கலைஞர் ஏற்க மறுத்து விட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த பார்வையாளர்களில் ஒருவரான பப்லு குமார் என்பவர் அந்த பெண்ணை துப்பாக்கியால் சுட்டார். இதில் படுகாயம் அடைந்த பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து பப்லு குமார் மீது போலீசார் வழக்குபதிவு செய்து அவரை கைது செய்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நான்கு கால்கள் நான்கு கைகளுடன் பிறந்த அதிசய குழந்தை: விநாயகனின் அவதாரம் என்று பார்க்க குவியும் மக்கள்!!
Next post டெல்லி: பியூட்டி பார்லரில் அமெரிக்க பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபர் கைது!!