புதையல் இருப்பதாக கருதி நரபலி கொடுக்க வாலிபரை கொலை செய்த நண்பர்கள் 3 பேர் கைது!!
ஆந்திர மாநிலம் கேட் புத்தூர் பகுதியை சேர்ந்தவர் கணேஷ். அவரது மகன் உதயகுமார் (வயது 22). பட்டதாரி. இவர், அவரது நண்பர்களுடன் சம்பவத்தன்று வெளியே சென்றார்.
அதன்பிறகு வீடு திரும்பவில்லை. இதுகுறித்து உதயகுமாரின் பெற்றோர் கார்வேட்டி நகர போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து, அதே பகுதியை சேர்ந்த உதயகுமாரின் நண்பர்கள் ரமேஷ், சிரஞ்சீவி உள்பட 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் கூறியதாவது:–
உதயகுமாரை நாங்கள் (நண்பர்கள்) கார்வேட்டி நகர மண்டலம் நிஷம் துர்கா என்ற இடத்திற்கு அழைத்து சென்றோம். அங்கு நாங்கள் 4 பேரும் சேர்ந்து மது அருந்தினோம். பின்னர் அருகில் உள்ள பழமையான கோட்டை என்ற இடத்துக்கு சென்றோம். அங்கு புதையல் இருப்பதாக எங்களுக்கு ஏற்கனவே தகவல் கிடைத்தது. இதனால் தான் நாங்கள் 4 பேரும் அங்கே சென்றோம்.
இதனையடுத்து புதையல் தோண்ட வேண்டும் என்றால் முதலில் யாரவது ஒருவரை பலி கொடுக்க வேண்டும் என்று எண்ணினோம். இதனால் உதயகுமாரை கழுத்தை அறுத்துக்கொலை செய்து, மலையில் இருந்து உடலை தூக்கி வீசினோம். பின்னர் பயந்து போன நாங்கள் 3 பேரும் அங்கிருந்து வந்துவிட்டோம்.
இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.
அதைத்தொடர்ந்து போலீசார் அவர்கள் 3 பேரையும் கைது செய்தனர். பின்னர் கொலை நடந்த இடத்துக்கு அவர்களை அழைத்து சென்று, உதயகுமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக புத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் அவர்கள் 3 பேரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Average Rating