400 ஆண்டுகள் பழைமையான யானைப் பறவை முட்டை ஏலத்துக்கு வருகின்றது: 70 ஆயிரம் டாலர் வரை விலைபோக வாய்ப்பு!!
ஈமு கோழி மற்றும் நெருப்புக் கோழி இனத்தைச் சேர்ந்த யானைப் பறவை எனப்படும் அரியவகை பறவைகள் சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்திருந்தன.
யானைப் பறவையே உலகின் மிகப் பெரிய பறவையாக இருந்தது. அது மூன்று மீட்டரை விட உயரமானதாகவும், சுமார் 500 கிலோ எடை கொண்டதாகவும் இருந்துள்ளதாக நம்பப்படுகிறது. இறுதியாக, மடகாஸ்கரில் காணப்பட்ட இந்தப் பறவையினம் பதினாறாம் நூற்றாண்டுடன் அழிந்து விட்டதாகக் கருதப்படுகிறது.
யானைப் பறவையின் முட்டைகளின் எச்சங்கள் சில இடங்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவற்றில் சில முட்டைகள் சுமார் ஒரு மீட்டர் சுற்றளவு கொண்டதாக இருந்துள்ளன. இவ்வகையில், கிடைத்த ஒரு யானைப் பறவை முட்டை லண்டனில் உள்ள ஸாத்தெபய்ஸ் ஏல நிறுவனத்தில் ஏலம் விடப்படவுள்ளது.
400 ஆண்டுகால பழைமையான இந்த அபூர்வ முட்டை சுமார் 70 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் வரை ஏலம் போகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
Average Rating