கோவையில் திருமண தகவல் மையம் பெயரில் அழகிகளை சப்ளை செய்த கும்பல் கைது!!

Read Time:3 Minute, 18 Second

9e3c309f-428b-4e3d-9429-076862e2ccdb_S_secvpfகோவை 100 அடி ரோட்டில் தனியாருக்கு சொந்தமான காம்ப்ளக்ஸ் உள்ளது. இங்கு திருமண தகவல் மையம் செயல்பட்டு வருகிறது.

இந்த தகவல் மையத்தில் விபசாரம் நடைபெறுவதாகவும், இங்கிருந்து கல்லூரி மாணவிகள் மற்றும் வெளிமாநில அழகிகள் கோவையின் முக்கிய பிரமுகர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு சப்ளை செய்யப்படுவதாகவும் ரத்தினபுரி போலீசுக்கு தகவல்கள் வந்தது.

அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சாலைராம் சக்திவேல், சப்–இன்ஸ்பெக்டர் காசிபாண்டியன் மற்றும் போலீசார் அந்த திருமண தகவல் மையத்தை உன்னிப்பாக கவனித்து வந்தனர். அப்போது அது திருமண தகவல் மையம் அல்ல. வாடிக்கையாளர்களுக்கு அழகிகளை அனுப்பும் விபசார மையம் என்பது உறுதியானது. அதன்பேரில் போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தினார்கள்.

போலீசாரே அங்கு வாடிக்கையளார் போல் சென்று அழகி வேண்டும் என்றனர். அதற்கு திருமண தகவல் மையத்தில் இருந்தவர்கள் சம்மதம் தெரிவித்தனர்.

1000 ரூபாயை வாங்கிக்கொண்ட அவர்கள் தகவல் மையத்தின் ஒரு பகுதியில் இருக்கும் பெண்ணிடம் உல்லாசமாக இருக்கலாம் என்று கூறி அனுப்பி வைத்தனர். அவர்கள் இவ்வாறு கூறியதும் காம்ப்ளக்சின் கீழே நின்று கொண்டிருந்த போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் அதிரடியாக திருமண தகவல் மையத்துக்கு சென்று அங்கிருந்த அழகியை மீட்டனர்.

மேலும் திருமண தகவல் மையத்தில் இருந்த 2 பெண்கள் உள்பட ஒரு ஆண் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

அவர்களிடமிருந்த 3 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. விசாரணையில் அந்த பெண்களில் ஒருவர் சித்தாபுதூரைச் சேர்ந்த நசீமா(வயது 42) என்பதும் மற்றொரு பெண் கவுண்டம்பாளையத்தை சேர்ந்த ஆயிஷா என்ற ஜோதிமணி(39) என்பதும் தெரியவந்தது. அந்த ஆண் இடையர் வீதியைச் சேர்ந்த ரவிக்குமார்(49) ஆவார். இவர்தான் அழகிகளுக்கு முன்பணம் கொடுத்து கோவைக்கு அழைத்து வருவார். பின்னர் அவர்களை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பி வைத்து பணம் பெற்றுக்கொள்வார். இவர்கள் பணத்துக்கு தகுந்தாற்போல் வாடிக்கையாளர்களுக்கு கல்லூரி மாணவிகள் மற்றும் வெளிமாநில அழகிகளை சப்ளை செய்தது தெரிய வந்தள்ளது. கைதான 3 பேரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பாலில் விஷம் கலந்து கொல்லப்பட்ட 2 சிறுமிகளின் உடல் தோண்டி எடுப்பு!!
Next post இன்ஸ்பெக்டர் மீது செக்ஸ் புகார் கூறிய திருச்சி பெண்ணிற்கு கொலை மிரட்டல்: உரையாடல் பதிவை வெளியிட்டார்!!