பீகாரில் மனைவியுடன் மருத்துவர் கடத்தல்!!
பீகார் மாநிலத்தில் மனைவியுடன் மருத்துவர் ஒருவர் கடத்தப்பட்டுள்ள சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள கிரித் பகுதியில் நடைபெற்ற உறவினரின் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு தனது மனைவியுடன் சொந்த ஊருக்கு மருத்துவர் திரும்பி கொண்டிருந்தார். கயா மாவட்டத்திற்குள் நுழைந்த பின் மருத்துவரும், அவரது மனைவியும் திடீரென காணாமல் போனதாக கயா நகர காவல் கண்காணிப்பாளர் ராகேஷ் குமார் கூறினார்.
காணாமல் போன மருத்துவரின் சகோதரர் அளித்துள்ள புகாரின் படி, நேற்று மதியம் தனது உதவியாளருடன் தொலைபேசியில் பேசிய மருத்துவர், கயா பகுதியில் உள்ள பரச்சட்டி காவல் நிலையத்திற்குட்பட்ட பர்ஹி அருகே வந்துகொண்டிருப்பதாக கூறியுள்ளார். அதன் பின் மருத்துவமனையில் நோயாளிகளின் வருகை அதிகமானதால், மீண்டும் மருத்துவரை உதவியாளர் தொடர்பு கொண்ட போது அவரது செல்போன் சுவிட்ச்-ஆப் ஆகியிருந்ததாக புகாரில் கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து கடத்தல் வழக்கு பதிவு செய்த போலீசார், இருவரையும் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
Average Rating