சல்மான் கானுக்காக சிறப்பு யாகம்!!
Read Time:1 Minute, 9 Second
2002ம் ஆண்டு மதுபோதையில் கார் ஓட்டி, விபத்து ஏற்படுத்திய வழக்கில் பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மும்பை அமர்வியல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து மும்பை ஐகோர்ட்டில் சல்மான் மேல்முறையீடு செய்ததுடன், பிணை கேட்டும் மனு அளித்தார். சல்மானின் மனுவை ஏற்று 2 நாட்கள் இடைக்கால பிணை வழங்கி மும்பை ஐகோர்ட் உத்தரவிட்டது.
சல்மானுக்கு வழங்கப்பட்ட பிணை இன்றுடன் முடிவடைவதால், பிணையை நீட்டிக்குமாறு மேலும் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மனு இன்று விசாரணைக்கு வர உள்ளது. இதில் சல்மான் கானுக்கு சாதகமாக தீர்ப்பு வரவேண்டி வாரணாசியில் அவரது இரசிகர்கள் சிறப்பு யாகம் நடத்தினர்.
Average Rating