பெண்ணை செங்கல்லால் தாக்கிய போலீஸ் அதிகாரி சஸ்பெண்ட்!!
சாலையில் பெண் ஒருவரை செங்கல்லால் தாக்கிய சம்பவம் வீடியோவில் பதிவானதையடுத்து டெல்லி போலீஸ் ஒருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
இருசக்கர வாகனத்தில் தனது பையனை பள்ளியிலிருந்து அழைத்து வந்துகொண்டிருந்தபோது அந்தப்பெண்ணை சாலையில் வழிமறித்த போக்குவரத்து போலீசான சதீஷ் சந்த், சாலை விதிமுறையை மீறியதாகக் கூறி அவரிடம் அபராதம் கேட்டுள்ளார். அதற்கு மறுத்த அந்தப் பெண் ஒரு செங்கல்லை எடுத்து சதீஷின் வண்டியில் எறிந்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த சதீஷ் சந்த் அந்தப் பெண் மீது செங்கல்லை எறிந்து தாக்கியுள்ளார். இதனால் காயமடைந்த அந்தப் பெண் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவத்தை அந்த வழியே சென்றுகொண்டிருந்த ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். இதனால் இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்ததையடுத்து பெண்ணைத் தாக்கிய அந்த போலீஸ் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருப்பதாகவும், அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் காவல் துறை உயரதிகாரியான பாசி தெரிவித்துள்ளார்.
Average Rating