தேவகோட்டை அருகே 3 வயது மகனை கொன்று இளம்பெண் தற்கொலை!!
Read Time:58 Second
சிவகங்கை மேலூர் ரோடு பகுதியை சேர்ந்தவர் அவிகுந்தன். இவர் அந்த பகுதியில் ஓட்டல் நடத்தி வருகிறார். இவரது மனைவி லட்சுமி பிரியா (வயது 24). இவர்களது மகன் கவுதமன் (வயது 3).
சம்பவத்தன்று லட்சுமி பிரியா குடும்ப தகராறு காரணமாக தனது மகன் கவுதமனோடு கல்லல் அருகே சொக்கநாதபுரம் கத்தப்பட்டு கிராமத்தில் உள்ள தாய் வீட்டுக்கு சென்றார்.
பின்னர் நேற்று மதியம் வீட்டில் யாரும் இல்லாத போது தனது 3 வயது மகனை தூக்கில் தொங்கவிட்டு கொன்று, தானும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து மதகுபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
Average Rating