டெல்லியில் 3 பெண்கள் மீது காரை ஏற்றிய சப்-இன்ஸ்பெக்டர் கைது!
Read Time:1 Minute, 12 Second
டெல்லியின் தெற்கு பகுதியில் 3 பெண்கள் மீது காரை ஏற்றிய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தெற்கு டெல்லியில் உள்ள பதர்பூர் மேம்பாலம் அருகே இன்று காலை 9.30 மணியளவில் வந்த கார் ஒன்று அங்கு துப்புரவு தொழிலில் ஈடுபட்டிருந்த பெண்கள் மீது மோதியது. இந்த விபத்தில் ஒரு பெண் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினார். 2 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
முதற்கட்ட விசாரனையின் படி, இரவு நேரப் பணி (நைட் ஷிப்ட்) முடிந்து தனது காரில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்த சப்- இன்ஸ்பெக்டரான ரிஷி பல்(59), பெண்கள் மீது மோதியது தெரிய வந்துள்ளது. இதையடுத்து அவரை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர்.
Average Rating