ஐதராபாத்தில் தங்கியிருந்து செம்மரக்கடத்தலில் ஈடுபட்ட சீனப்பெண்: கூட்டாளி சிக்கியதால் தப்பி ஓட்டம்!!
Read Time:1 Minute, 19 Second
செம்மரக்கடத்தல் தொடர்பாக ஆந்திர போலீசார் நடத்தி வரும் விசாரணையில் பலர் சிக்கி வருகிறார்கள்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு ஐதராபாத்தில் சீனாவைச் சேர்ந்த யாங்பிங் என்ற சர்வதேச செம்மரக் கடத்தல்காரர் கைது செய்யப்பட்டான்.
அவரிடம் நடத்திய விசாரணையில் அவனுக்கு ஐதராபாத்தைச் சேர்ந்த ஒரு பெண் உதவி செய்தது தெரிய வந்தது. அந்த பெண்ணின் அழைப்பின் பெயரிலேயே அவன் ஐதராபாத் வந்திருந்தான்.
சீனாவைச் சேர்ந்த அந்த பெண் ஐதராபாத்தில் நீண்ட காலமாக குடியிருந்து வருகிறார். செம்மரக்கடத்தலை முக்கிய தொழிலாக கொண்டு இருந்தார்.
யாங்பிங் கைதானதை அறிந்ததும் அந்த பெண் தப்பி ஓடி விட்டார். அவர் கர்நாடகாவில் பதுங்கி இருக்கலாம் என தெரிய வந்துள்ளது.
அவரை பிடிக்க ஆந்திரா அதிரடிப்படையின் ஒரு பிரிவினர் கர்நாடக சென்றுள்ளனர்.
Average Rating