திருவனந்தபுரத்தில் 2 பெண்களை கற்பழித்த வியாபாரி கைது!!
திருவனந்தபுரம் அருகே உள்ள பெருவிளை என்ற இடத்தை சேர்ந்தவர் சையது (வயது 38). இவர் கோவில் திருவிழாக்களில் கடைகள் போட்டு வியாபாரம் செய்பவர். இவருக்கும் பெருவிளையை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் காதல் ஏற்பட்டது.
அந்த பெண்ணுடன் நெருங்கி பழகிய சையது திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி அந்த பெண்ணை கற்பழித்ததாக தெரிகிறது. அதன் பிறகு அந்த பெண்ணை சந்திப்பதை சையது தவிர்த்ததால் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி அந்த பெண் வற்புறுத்தினார்.
ஆனால் அவரை ஏமாற்றி விட்டு சையது தலைமறைவாகி விட்டார். இதனால் பாதிக்கப்பட்ட பெண் பாறசாலை போலீசில் இதுபற்றி புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து சையதை தேடிவந்தனர்.
அப்போது அவர் வெளிநாட்டிற்கு தப்பி சென்றது தெரிய வந்தது. இந்த நிலையில் 6 வருடத்திற்கு பின்பு ஊர் திரும்பியவர் ஏர்வாடி பகுதியில் திருவிழாவில் சையது கடை போட்டு இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் அவரை கைது செய்ய விரைந்தனர். ஆனால் அவர் போலீசார் பிடியில் சிக்கவில்லை.
இந்த நிலையில் மேலும் 4 வருடங்கள் ஓடிய நிலையில் சையது மீண்டும் ஏர்வாடி பகுதிக்கு வந்திருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் அங்கு சென்று அவரை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் மலப்புரம் பகுதியிலும் ஒரு பெண்ணை ஏமாற்றி கற்பழித்தது தெரிய வந்தது.
மேலும் தலைமறைவாக இருந்த காலத்தில் சையது தமிழகத்தின் கோவை மற்றும் ஆந்திரா, கர்நாடகா பகுதிகளில் சுற்றி திரிந்துள்ளார். அப்போது தனது பெயரை மாற்றி வியாபாரம் செய்துள்ளார். இந்த தகவல்கள் போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. மேலும் சையதால் வேறு பெண்கள் யாரும் பாதிக்கப்பட்டு உள்ளார்களா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Average Rating