குடும்ப நிறுவனங்களில் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் வேலை செய்யலாம்: சட்டத் திருத்தங்களுக்கு அமைச்சரவை ஒப்புதல்!!

Read Time:2 Minute, 52 Second

8f643482-d202-4e45-a74f-eeac3578e776_S_secvpfகுடும்ப நிறுவனங்கள் மற்றும் பொழுதுபோக்கு துறை சார்ந்த நிறுவனங்களில் மட்டும் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் பணி செய்ய அனுமதிக்கும் சட்டத்திருத்ததிற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

குழந்தை தொழிலாளர் சட்டத்தின்படி, 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை வேலைக்கு அமர்த்துவது குற்றமாகும். 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே அபாயகரமான தொழிற்சாலைகளில் வேலை செய்ய முடியும்.

தற்போது செய்யப்பட்டுள்ள திருத்தங்கள் மூலம், இனி 14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் தங்கள் குடும்பத்திற்கோ குடும்ப நிறுவனங்களுக்கோ உதவி செய்யலாம். பொழுதுபோக்கு சார்ந்த துறைகளில் பாதுகாப்பு விதிமுறைகளுடன் வேலை செய்ய அனுமதிக்கப்படுவார்கள். அதேசமயம் 14 முதல் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகள் அபாயகரமான தொழிற்சாலைகளில் பணியமர்த்த அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

குழந்தை தொழிலாளர் சட்டத்தை மீறுவோர் மீது கடுமையான தண்டனை வழங்கும் வகையிலும் சட்டத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. பிள்ளைகளை வேலைக்கு அனுப்பி முதல் முறை சட்டத்தை மீறும் பெற்றோருக்கு அபராதம் எதுவும் விதிக்கப்பட மாட்டாது. ஆனால், வேலை வழங்கும் முதலாளி தண்டனைக்குரியவர். ஒருவேளை பெற்றோர் தொடர்ந்து இதே குற்றத்தை செய்தால் 10 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படலாம்.

குழந்தைகளை வேலைக்கு அமர்த்தும் முதலாளிக்கு விதிக்கப்படும் அபராதமானது தற்போதைய தொகையான 20 ஆயிரம் ரூபாயில் இருந்து 50 ஆயிரமாக உயர்த்தப்படும். இரண்டாவது முறை சட்டத்தை மீறி குழந்தைகளை பணிக்கு சேர்த்தால் குறைந்தபட்சம் ஓராண்டு சிறைத்தண்டனை வழங்கப்படும். அது மூன்றாண்டுகள் வரையில் நீட்டிக்கப்படலாம்.

மத்திய அமைச்சரவை இந்த சட்டத்திருத்தங்களுக்கு இன்று ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து, இனி இந்த குழந்தைகள் சட்டத்திருத்த மசோதா பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post திருமணமாகி 4 வருடமாகியும் கழிவறை கட்டித்தராத கணவனை பிரிந்த மனைவி!!
Next post திருப்பத்தூரில் ரூ.3 ஆயிரம் கடனுக்காக குழந்தைகளுக்கு சூடு வைத்த கொடூரம்!!