ஈராக் போரில் கலந்து கொள்ள மறுத்த அமெரிக்க ராணுவ அதிகாரி மீது வழக்கு

Read Time:1 Minute, 18 Second

Irak.jpgஈராக் போர் சட்டத்துக்கு புறம்பானது என்பதால் அங்கு சென்று போர் புரிய மறுத்த அமெரிக்க ராணுவ அதிகாரி ஒருவர் மீது ராணுவ கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. அவர் பெயர் எக்ரன் வடாடா. அவர் ஈராக் போரை சட்டத்துக்கு புறம்பானது என்றும், அதில் கலந்து கொள்வது போர் குற்றவாளியாக என்னை கருத செய்யும் என்றும் கூறி ஈராக் செல்ல மறுத்து விட்டார்.

அமெரிக்க ராணுவம் அவர் மீது ராணுவ கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளது. இந்த வழக்கில் அவர் குற்றவாளி என்று கோர்ட்டு தீர்ப்பு கூறினால் அவருக்கு பல ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதிக்கப்படும்.

கடந்த ஜனவரி மாதமே அவர் பதவி விலக அவர் விரும்பினார். ஆனால் அவரது ராஜினாமாவை ராணுவம் ஏற்க மறுத்து விட்டது. ஆப்கானிஸ்தானில் போர் புரிய விரும்பிய அவர் ஈராக்கில் போர் புரிய மறுத்து விட்டார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post 25 தீவிரவாதிகள் படுகொலை: பாக்.பாதுகாப்பு படை அதிரடி
Next post தேவைப்பட்டால் விடுதலைப்புலிகளை பகிரங்கமாக சந்திப்பேன்: வைகோ