பள்ளி மாணவியை மூன்று ஆண்டுகள் தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்த தலைமையாசிரியர்!!
சத்தீஸ்கர் மாநிலத்தில் 15 வயது பள்ளி மாணவி ஒருவரை தலைமையாசிரியர் 3 ஆண்டுகள் தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் நாடு முழுவதும் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அம்மாநிலத்தின் கோன்டாகோன் மாவட்டத்தில் வசிக்கும் அம்மாணவி, தலைமை ஆசிரியரின் செயல்பாட்டால் கர்ப்பமடைந்ததுடன், கடந்த மாதம் குழந்தையையும் பெற்றெடுத்தாள். அம்மாணவிக்கு இவ்வளவு பெரிய கொடுமை நடந்த நிலையில் நேற்று போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டவுடன் தான் இவ்விவகாரம் வெளியே தெரிந்ததாக கோன்டாகோன் மாவட்ட கூடுதல் காவல்கண்காணிப்பாளரான நிவேதிதா சர்மா கூறியுள்ளார்.
இதையடுத்து விரைந்து செயல்பட்ட மக்டி காவல்நிலைய போலீசார், 52 வயது தலைமையாசிரியர் ஜாகர்பாரா மாதவ் நாக் மீது வழக்கு பதிவு செய்ததுடன், அவரை கைது செய்வதற்காக தமட்ரி மாவட்டத்தில் உள்ள அவரது சொந்த ஊரான சிஹாவாவுக்கு சென்றுள்ளனர்.
முன்னதாக மாணவி கர்ப்பமடைந்த செய்தி அறிந்ததும், இவ்விவகாரத்தை வெளியே சொன்னால் நடப்பதே வேறு என்று அந்த தலைமை ஆசிரியர், மாணவியையும் அவரது பெற்றோரையும் மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. கல்வி கற்றுத்தர வேண்டியவர்களே தற்போது கயவாணிகளாக இருப்பதால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதற்கு கூட இனி பெற்றோர்கள் பயப்பட வேண்டிய நிலை
Average Rating