தோழியின் வீட்டுக் குளியலறையில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பிரபல மாடல் மரணம்: பகீர் பின்னணி!!
மும்பையின் வெர்சோவாவில் உள்ள தோழியின் அபார்ட்மென்டில் மாடலிங் துறையில் உள்ள பெண் ஒருவர் கழுத்து அறுபட்ட நிலையில் மரணம் அடைந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 8 வருடங்களாக மும்பையில் வசித்து வரும் டெல்லியைச் சேர்ந்த ஷிகா ஜோஷி(30) கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் தன் தோழியின் அபார்ட்மென்டில் குடி புகுந்தார்.
இந்நிலையில், கடந்த சனிக்கிழமை மாலை, தனது வீட்டில் உள்ள குளியலறையில் கழுத்து அறுபட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்த ஷிகாவை பார்த்து அதிர்ச்சியில் உறைந்தார் மது. உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து, மும்பை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஷிகாவின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இறந்து போன தனது தோழி ஷிகா சில மாதங்களாகவே மன அழுத்தத்தில் இருந்ததாக மது, போலீசில் தெரிவித்துள்ளார்.
ஷிகாவின் மரணம் குறித்து அவரது சகோதரர் விஷேஷ், ஷிகா சில வருடங்களுக்கு முன்பு சிகிச்சைக்காக சென்ற போது அந்த பகுதியில் உள்ள டாக்டர் தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக போலீசில் புகாரளித்தார். தற்போது நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வரும் அந்த வழக்கை வாபஸ் பெறுமாறு சிலர் மிரட்டியதால் ஷிகா கடும் நெருக்கடிக்கு ஆளானதாக தெரிவித்துள்ளார்.
Average Rating