வழக்கில் ஆஜராகாததால் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு பிடிவாரண்டு: பவானி கோர்ட்டு உத்தரவு!!
Read Time:1 Minute, 10 Second
திருப்பூர் மாவட்டம், காங்கயம் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணிபுரிபவர் மகாலிங்கம்.
இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் பவானியில் ஆய்வாளராகப் பணிபுரிந்தபோது 2 திருட்டு வழக்குகள், 3 சாலை விபத்துகள் மற்றும் ஒரு சாலை மறியல் வழக்கு உள்பட 6 வழக்குகளைப் பதிவு செய்து பவானி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
தற்போது இந்த வழக்கு பவானி கோர்ட்டில் நடைபெற்று வந்தது.
இந்த வழக்கில் கடந்த 7 மாதமாக ஆய்வாளர் மகாலிங்கம் விசாரணையின் போது ஆஜராகவில்லை. மேலும் பலமுறை சம்மன் அனுப்பியும் விசாரணைக்கு ஆஜராகாததால் வழக்கை விசாரித்த நீதிபதி திருமால், போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாலிங்கத்துக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டார்.
Average Rating