கேரளாவில் காதலியை கடத்தி கற்பழித்து நண்பர்களுக்கு விருந்தாக்கிய வாலிபர் உள்பட 3 பேர் கைது!!
திருவனந்தபுரம் அருகே உள்ள வைக்கம் பகுதியைச் சேர்ந்தவர் சனல் (வயது 24), கூலி தொழிலாளி. இவரும் கிளிமானூர் பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும் காதலித்து வந்தனர். அந்த பெண் சனலை தீவிரமாக காதலித்தார். ஆனால் சனலோ அவரை அடைய வேண்டும் என்பது மட்டுமே குறிக்கோளாக இருந்தது.
சனலின் நண்பர்கள் ரஞ்சித் (23), சஜ்ஜன்தாஸ் (29), ஆட்டோ டிரைவராக சஜ்ஜன்தாஸ் உள்ளார். தனது நண்பர்கள் உதவியுடன் தனது காதலியை அடைய சனல் திட்டமிட்டார். இந்த திட்டத்திற்கு சஜ்ஜன்தாசின் கள்ளக்காதலி ராஜலெட்சுமி (24) என்பவரை பயன்படுத்தவும் திட்டம் தீட்டப்பட்டது.
அதன்படி, ராஜலெட்சுமி சனலின் காதலியை ஏமாற்றி தமிழகத்திற்கு ரெயிலில் அழைத்து வந்தார். ஏர்வாடியில் உள்ள ஒரு லாட்ஜிற்கு அந்த பெண்ணுடன் ராஜலெட்சுமி சென்றார். அந்த லாட்ஜின் அறையில் சனலும், அவரது நண்பர்கள் ரஞ்சித், சஜ்ஜன்தாஸ் ஆகியோர் ஏற்கனவே தயாராகி காத்து இருந்தனர்.
லாட்ஜ் அறையில் அடைத்து வைத்து தனது காதலியை சனல் கற்பழித்தார். பிறகு தனது காதலியை நண்பர்கள் இருவருக்கும் விருந்தாக்கினார்.
இதற்கிடையில் அந்த இளம்பெண்ணின் பெற்றோர், மகள் மாயமானது பற்றி கிளிமானூர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பெண்ணின் செல்போன் டவர் மூலம் துப்பு துலக்கிய போது, செல்போன் சிக்னல் அந்த பெண் ஏர்வாடியில் இருப்பதை காட்டியது.
இதை தொடர்ந்து ஆற்றிங்கல் போலீஸ் டி.எஸ்.பி. பிரதாப் தலைமையிலான போலீசார் ஏர்வாடி விரைந்தனர். அவர்கள் தமிழக போலீசார் உதவியுடன் ஏர்வாடி லாட்ஜில் அதிரடி சோதனை நடத்தி அந்த இளம்பெண்ணை மீட்டனர்.
போலீசாரிடம் தனக்கு நேர்ந்த கொடுமைகளை கூறி அந்த பெண் கதறி அழுதார். இதை தொடர்ந்து அவரை கற்பழித்த காதலன் சனல், அவரது நண்பர்கள் ரஞ்சித், சஜ்ஜன் தாஸ், அவர்களுக்கு உதவியாக இருந்த ராஜலெட்சுமி ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
பிறகு அவர்கள் 4 பேரையும் ஆற்றிங்கல் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கற்பழிக்கப்பட்ட இளம்பெண் மருத்துவ பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
Average Rating