நெல்லை கலெக்டர் அலுவலகத்திற்கு ஆட்டோவில் மனுக்களை கட்டி தொங்க விட்டு வந்த டிரைவர்!!
Read Time:1 Minute, 21 Second
நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள நம்பிதலைவன்பட்டயத்தை சேர்ந்தவர் மாரிதுரை, லோடு ஆட்டோ டிரைவரான இவர் தற்போது மீன் வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் வள்ளியூர் போலீசார் ஒரு வழக்கு தொடர்பாக மாரிதுரையை விசாரித்து வந்துள்ளனர்.
ஆனால் அவர் தன் மீது போலீசார் பொய் வழக்கு போட்டுள்ளதாகவும், இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் எஸ்.பி.–கலெக்டர் மற்றும் அதிகாரிகளிடம் புகார் மனு கொடுத்துள்ளார். பலமுறை மனுக்கள் கொடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லையாம்.
இந்நிலையில் மாரிதுரை, இதுவரை தான் கொடுத்த மனுக்கள் அனைத்தையும் லோடு ஆட்டோவில் கட்டி தொங்க விட்டு நெல்லை கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று வந்தார். பின்னர் தனது கோரிக்கையை வலியுறுத்தி மீண்டும் கலெக்டரிடம் மனு கொடுத்து விட்டு சென்றார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
Average Rating