அரியலூர் அண்ணா பொறியியல் கல்லூரி பேராசிரியைகள்– மாணவிகளுக்கு திடீர் வாந்தி–மயக்கம்!!

Read Time:1 Minute, 43 Second

f8f22eeb-0c85-47f1-8907-0e8e05ffaf63_S_secvpfஅண்ணா பொறியியல் கல்லூரியின் உறுப்பு கல்லூரி அரியலூர் அருகே உள்ள காவனூர் கிராமத்தில் உள்ளது. இங்குள்ள விடுதியில் தங்கி ஏராளமான மாணவிகள் படித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் நேற்று இரவு விடுதியில் உணவு சாப்பிட்டு விட்டு தூங்கிய பேராசிரியைகள் சங்கீதா, தமிழரசி மற்றும் முதலாம் ஆண்டு மாணவிகள் கீர்த்தனா, பிரியதர்ஷினி, சுகந்தி, அகிலா உள்பட 13 பேருக்கு நள்ளிரவில் திடீரென வாந்தி–மயக்கம் ஏற்பட்டது.

இதையடுத்து அவர்களை விடுதி வார்டன் மீட்டு அரியலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தார். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து தகவல் அறிந்த வட்டார மருத்துவ அதிகாரி கஸ்தூரிபாய் ஆஸ்பத்திரிக்கு சென்று அவர்களிடம் நலம் விசாரித்தார். மேலும் அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே கல்லூரியின் விடுதிக்கு சென்ற அரியலூர் போலீசார் பேராசிரியைகள் மற்றும் மாணவிகள் சாப்பிட்ட உணவில் பல்லி ஏதும் விழுந்ததா? அல்லது கெட்டு போன உணவா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தேனி மாவட்டத்தில் 15 குழந்தை திருமணம் தடுத்து நிறுத்தம்!!
Next post ஓமலூர் அருகே காதலை பிரிப்போர் சங்கம் என்று பிளக்ஸ் பேனர் வைத்ததால் பரபரப்பு!!