த்ரிஷாவுக்கு அம்மாவா? “நோ…நோ…” -குஷ்பு ஓட்டம்.
அபியும் நானும் படத்தில் த்ரிஷாவுக்கு அம்மாவாக நடிக்க அழைத்தார்கள் குஷ்புவை. முதலில் ஒப்புக் கொண்டவர் பிறகு என்னாச்சோ? அச்சச்சோ…நான் மாட்டேன் என்று சொல்லிவிட்டார். அவருக்கு பதிலாக வேறொரு நடிகைக்கு வலை வீசிக் கொண்டிருக்கிறார்கள். ஏன் அம்மாவா நடிக்க பிடிக்கலையா அக்காவுக்கு? கேட்டால், அதுதான் இல்லை என்கிறார்கள் கோலிவுட்டில். பா.விஜய்க்கே அம்மாவாக நடிக்க ஒப்புக் கொண்ட குஷ்பு, த்ரிஷாவுக்கு அம்மாவாக நடிக்க மாட்டா£ரா என்ன? அட… இதென்ன புதுக்கூத்து? கலைஞரின் தாய் காவியத்தில் நாயகனாக அறிமுகமாகிறார் திரைப்பட பாடலாசிரியர் பா.விஜய். அவருக்கு அம்மாவாக நடிக்க முதலில் ஒப்பந்தம் செய்யப்பட்டார் ராதிகா. பிறகு திடீரென்று குஷ்பு இருந்தால் நன்றாக இருக்குமே என்று நினைத்தவர்கள், அவரிடம் விஷயத்தை சொல்ல, ஓ.கே என்று சொல்லிவிட்டார் குஷ்பு.
மீண்டும் முதல் பாராவிற்கு வருவோம். த்ரிஷாவுக்கு அம்மா வேடம் கட்ட குஷ்பு தயாராக இல்லாததற்கு பல காரணங்கள். அதில் ஒரு காரணம், இளம் நடிகைகள் எல்லாருமே குஷ்புவை எங்காவது விழாக்களில் பார்த்தால் வலிய போய் பேசி, கொஞ்ச நேரத்தில் வாயாட ஆரம்பித்துவிடுவார்களாம். ஆனால், எங்கு பார்த்தாலும் ஒரு புன்னகையோடு ஒதுங்கி கொள்வாராம் த்ரிஷா. அதுமட்டுமல்ல… அருகருகே அமர்ந்திருந்தாலும், தன் செல்போனில் மூழ்கிப்போய்விடுவாராம் த்ரி. சீனியர் நடிகைகளை ஜுனியர்கள் ஒதுக்கினால், சீனியர்களும் ஒதுக்கத்தானே செய்வார்கள்?
அட… இம்புட்டு கதை இருக்கா இதுல..?
பின்குறிப்பு- இப்போது குஷ்புவுக்கு பதிலாக ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பவர், ஐஸ்வர்யா. சண்டை போடாம வீட்டுக்கு போயீடுவீங்களா தாயி?