ஆபாச கருத்தால் தொடரும் சர்ச்சை…!!
‘பிடிச்சிருக்கு’ என்ற படத்தின் மூலம் தமிழ் பட உலகுக்கு அறிமுகமானவர், விசாகா சிங். தொடர்ந்து, ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா,’ ‘வாலிப ராஜா’ ஆகிய படங்களிலும் நடித்தார். இவர், ‘பேஸ்புக்’கில் ‘டீ சர்ட்’ அணிந்து இருப்பது போன்ற தனது புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார்.
‘‘ஒவ்வொருவருமே மற்ற எல்லோருக்குமே வெளிநாட்டினர்தான்’’ என்ற வாசகம் அந்த டீ சர்ட்டில் அச்சிடப்பட்டிருந்தது. ‘‘இதுபோன்ற இன்னும் பல வாசகங்களை எதிர்பார்க்கிறேன்’’ என்று அவர் கேட்டுக் கொண்டிருந்தார். இதற்கு ஏராளமான ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை, ‘பேஸ்புக்’கில் பதிவு செய்திருந்தார்கள்.
ஒரு ரசிகர், ‘‘பார்க்க நன்றாக இருக்கிறீர்கள்…மார்பகங்களும்’’ என்று ஆபாசமாக கருத்து தெரிவித்து இருந்தார்.
அதற்கு விசாகா சிங், ‘பேஸ்புக்’கில் கடுமையாக தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். ‘‘என் உடம்பை பற்றி ஆபாச கருத்தை பகிர்ந்து இருக்கிறீர்கள். நான் ஒரு பெண். தங்களின் மேலான அறிவுக்கு ஒன்றை கூற ஆசைப்படுகிறேன். எல்லா பெண்களுமே என்னைப் போன்ற உடலமைப்பில்தான் இருக்கிறார்கள். உங்கள் அம்மா, தங்கை, மனைவி, பாட்டி, அத்தை, மகள், உறவினர்கள் என எல்லோருக்குமே…அவர்களிடம் சென்று இதே வார்த்தையை சொல்வீர்களா?’’ என்று கேட்டு இருந்தார்.
இந்த பதிலுக்கு ஆதரவுகளும், ஆச்சரியங்களும் பெருகிய நிலையில், நடிகை திரிஷா தனது ஆதரவை தெரிவித்து இருக்கிறார். ‘‘இதுபோன்ற கோழைகளை எதிர்கொண்ட விதம், அற்புதம். பெண்களின் சக்தியையே இது காட்டுகிறது’’ என்று தனது டுவிட்டர் பக்கத்தில், விசாகா சிங்குக்கு திரிஷா பாராட்டு தெரிவித்து இருக்கிறார்.
Average Rating