சட்டவிரோத சொகுசு வாகனங்கள் கண்டுபிடிப்பு

Read Time:1 Minute, 25 Second

சட்டவிரோதமான முறையில் ஜப்பானிலிருந்து கொண்டு வரப்பட்டிருந்த மூன்று சொகுசு வாகனங்களை ஊருகொடவத்தை சுங்க அதிகாரிகள் நேற்றுக் கைப்பற்றியுள்ளனர். ஊருகொடவத்தை சுங்கப் பிரிவில் வைக்கப்பட்டிருந்த கண்டேனர் ஒன்றை சோதனைக்குட்படுத்திய சுங்க அதிகாரிகள் இந்த வாகனங்களைக் கண்டுபிடித்தனர். கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் ஜப்பானிலிருந்து வந்த சரக்குக்கப்பல் ஒன்றில் வந்த இந்தக் கண்டேனரில் வாகன உதிரிப் பாகங்கள் இருக்கின்றதெனக் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் அந்த கண்டெனரை பரிசோதித்துப் பார்த்ததில் அதற்குள் அதி சொகுசு வாகனங்கள் வைக்கப்பட்டிருந்ததாக சுங்கத் திணைக்கள அதிகாரியொருவர் கூறியுள்ளார். இந்த வாகனங்கள் மூன்றும் சுமார் இரண்டரைக் கோடி ரூபா பெறுமதியுடையவை எனவும், மூன்று வாகனங்களும் அரச உடைமையாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post தொடர்ந்து கன மழை-மக்கள் அவதி, போக்குவரத்தும் பாதிப்பு
Next post ஜார்க்கண்ட் மாநிலத்தில் முன்னாள் முதல்-மந்திரி மகன் உள்பட 17 பேர் சுட்டு கொலை: நக்சலைட் தீவிரவாதிகள் அட்டூழியம்