பொள்ளாச்சி கல்லூரி மாணவர் மாயமான வழக்கில் கைதான 3 பேருக்கும் மாவோயிஸ்டு தலைவர் ரூபேசுடன் தொடர்பு!!
கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த அங்கலக்குறிச்சியை சேர்ந்தவர் சந்தோஷ்குமார். கல்லூரி மாணவர். இவர் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் திடீரென்று மாயமானார்.
இதுதொடர்பாக சந்தோஷ்குமாரின் தந்தை அர்ஜூனன் ஆழியாறு போலீசில் புகார் செய்தார்.
அதில் தனது மகனுக்கு சாதி ஒழிப்பு விடுதலை முன்னணி இயக்கத்தை சேர்ந்த கணபதி, செல்வராஜ், பொதுநல மாணவர் எழுச்சி இயக்க நிர்வாகி சிகாமணி ஆகியோருடன் நெருங்கிய தொடர்பு இருந்தது.
வறுமையை காரணம் காட்டி எனது மகனை அவர்கள் தவறான வழிக்கு அழைத்துச் சென்றுள்ளனர் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில் சந்தோஷ்குமாரை சிலர் மாவோயிஸ்டு இயக்கத்தில் சேர்த்து விட்டதாக தகவல் வெளியானது. அதன்பேரில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினார்கள்.
அப்போது சந்தோஷ்குமார் மாயமான வழக்கு தொடர்பாக கணபதி(39), செல்வராஜ்(55), சிகாமணி(27) ஆகியோரை கைது செய்தனர். இவர்கள் மீது மலைவாழ் மக்கள் வனப்பகுதியை ஆக்கிரமிப்பு செய்ய தூண்டி விட்டதாக வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இவர்களுக்கு மாவோயிஸ்டுகளுடன் தொடர்பு உள்ளதா? சந்தோஷ்குமாரை மாவோயிஸ்டு இயக்கத்தில் சேர்த்து விட்டார்களா? என்பது குறித்து கியூ பிரிவு போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.
கைதான 3 பேரையும் கோவையில் உள்ள கோர்ட்டுக்கு அழைத்து வந்த போது அவர்கள் போலீசுக்கு எதிராக கோஷம் எழுப்பினார்கள்.
கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் 3 பேரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கில் தொடர்புடைய கணேஷ்குமார், தருண் உள்ளிட்ட சிலரை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.
கைதான செல்வராஜ் பல்லடம் அரசு போக்குவரத்து கழக டெப்போவில் மெக்கானிக்காக பணியாற்றி வருகிறார். இவரது சொந்த ஊர் சுல்தான் பேட்டை.
கணபதி முன்னாள் போலீஸ்காரர் ஆவார். சிகாமணி கூலி தொழிலாளி ஆவார். கல்லூரி மாணவர் மாயமான வழக்கில் கைதான 3 பேரையும் போலீசார் தங்கள் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளனர். தற்போது கைதாகியுள்ள இவர்களுக்கும் சமீபத்தில் கோவையில் கைதான கேரளாவைச் சேர்ந்த மாவோயிஸ்டு கும்பல் தலைவர் ரூபேசுக்கும் தொடர்பு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கும்போது பல்வேறு திடுக் தகவல்கள் வெளியாகலாம் எனத்தெரிகிறது.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating