ஆபாச படங்களை இண்டர்நெட்டில் வெளியிடுவதாக நடன அழகிகளுக்கு மிரட்டல்: பல்லாவரம் வாலிபர் கைது!!
Read Time:1 Minute, 10 Second
பெங்களூர், கோவை, ஆந்திராவை சேர்ந்த 3 நடன அழகிகள் மதுரவாயலில் உள்ள வீட்டில் தங்கி இருந்தனர். அவர்கள் வெளிநாடு மற்றும் கிளப்புகளில் நடனம் ஆடி வந்தனர்.
இந்த நிலையில் நடன நிகழ்ச்சிகளுக்கு புரோக்கராக செயல்பட்டு வந்த பல்லாவரத்தை அடுத்த பொழிச்சலூரை சேர்ந்த அனீப் 3 நடன அழகிகளிடமும், உங்களது ஆபாச படங்கள் என்னிடம் உள்ளது. அதனை இண்டர்நெட்டில் வெளியிடாமல் இருக்க பணம் தர வேண்டும் என்று கூறி மிரட்டினார்.
அதிர்ச்சி அடைந்த நடன அழகிகள் இதுபற்றி மதுரவாயல் போலீசில் புகார் செய்தனர். பெண் போலீசார் மாறுவேடத்தில் அவர்களுடன் சென்று பணம் கேட்டு மிரட்டிய அனீப்பை கைது செய்தனர்.
அவரிடம் இருந்த லேப்–டாப், செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. அனீப்பிடம் விசாரணை நடந்து வருகிறது.
Average Rating