பெண் சிசு கொல்லப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும்: பிரதமர் மோடி வலியுறுத்தல்!!

Read Time:1 Minute, 54 Second

908bed7f-5966-4162-993e-00fbb021cbb9_S_secvpfஇந்தியாவில் பெண் சிசுக் கொலைகளை தடுப்பதில் தீவிர அக்கறை காட்ட வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.

சமூகத்தால் கைவிடப்படும் பெண் குழந்தைகளை காப்பாற்றும் விதமாக ’இந்திய பெண் குழந்தைகள் எழுச்சி’ (Girl Rising India) என்ற தொண்டு அமைப்பினை பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவும் ‘ஸ்லம் டாக் மில்லியனைர்’ படத்தில் கதாநாயகியாக நடித்த ப்ரிடா பிண்ட்டோவும் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கினர்.

இந்த அமைப்பின் சர்வதேச தூதராக உள்ள ப்ரீட்டா பிண்ட்டோ தலைமையில் சிலர் இன்று புது டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தனர். பெண் குழந்தையை காப்பாற்றுங்கள். பெண் குழந்தைகளுக்கு கல்வியறிவை ஊட்டுங்கள் என்ற முழக்கத்துடன் செயலாற்றிவரும் பிரதமரின் ’பேட்டி பச்சாவ் – பேட்டி படாவ்’ என்ற புதிய திட்டத்தை அவர்கள் வெகுவாக புகழ்ந்து, பாராட்டினார்கள்.

’இந்திய பெண் குழந்தைகள் எழுச்சி’ என்ற உங்கள் அமைப்பு குறிப்பாக இந்தியாவில் பெண் சிசு கொலைகளை தடுப்பதில் தீவிர அக்கறை காட்ட வேண்டும் என இந்த குழுவினரிடம் பிரதமர் மோடி கேட்டுக் கொண்டதாக பிரதமர் அலுவலகம் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பெண்களின் அழகு, ஆரோக்கியத்திற்கு கற்றாழை உணவுகள்..!!
Next post சேலத்தில் போலீஸ் ஏட்டு மகன் தூக்கு போட்டு தற்கொலை!!