மூதாட்டியை கொன்று நகைகொள்ளை: கொலையாளிகளை பிடிக்க 2 தனிப்படை அமைப்பு!!
ஈரோட்டை அடுத்த வள்ளிபுரத்தான் பாளையம் அத்தப்பாளயத்தில் உள்ளது மைத்ரேயன் கார்டன். இந்த இடத்தில் வசித்து வந்தவர்கள் சீனிவாசன். இவரது மனைவி ராஜேஸ்வரி (வயது 67).
நேற்று முன்தினம் வீட்டுக்கு வெளியே கட்டிலில் படுத்து தூங்கினார்
அப்போது நேற்று அதிகாலை 3மணி அளவில் அங்கு வந்த கொள்ளையர்கள் ராஜேஸ்வரியின் கழுத்தில் இருந்த நகைகளை பறிக்க முயன்றனர்.
அப்போது திடுக்கிட்டு விழித்த ராஜேஸ்வரி திமிறி சத்தம் போட முயன்றார். இதனால் ஆத்திரம் அடைந்த கொள்ளையர்கள் ராஜேஸ்வரியின் கழுத்தை கத்தியால் அறுத்தனர். இதில் அவர் பரிதாபமாக இறந்தார்.
பிறகு அவர் அணிந்து இருந்த 7 பவுன் நகைகளை பறித்து கொண்டு தப்பி ஓடி விட்டனர்.
இது குறித்து வெள்ளோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலை மற்றும் கொள்ளையில் ஈடுபட்டவர்களை தேடி வருகிறார்கள்.
இந்த சம்பவத்தையொட்டி ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபி சக்கரவர்த்தி உத்தரவின் பேரில் பெருந்துறை டி.எஸ்.பி பாஸ்கரன் மேற்பார்வையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன.
பெருந்துறை இன்ஸ்பெக்டர் ரமேஷ். மலையம்பாளையம் இன்ஸ்பெக்டர் மகேந்திரன் ஆகியோர் தலைமையில் இந்த தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.
இந்த தனிப்படையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார்கள்,
மூதாட்டி ராஜேஸ்வரியை கொலை செய்தவர்கள் அவரது உடலை போர்வையால் மூடிவிட்டு சென்று உள்ளனர்.
வழக்கமாக கொலை–கொள்ளையில் ஈடுபடுபவர்கள் இவ்வாறு நடந்துகொள்ள மாட்டார்கள் என்றும் எனவே இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் புதியவர்களாக இருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
வழக்கமாக ராஜேஸ்வரி வீட்டுக்கு வெளியே படுத்து தூங்குவதை பல நாட்கள் நோட்டமிட்டவர்களே இந்த சம்பவத்தில் ஈடுபட்டு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
கொள்ளையர்கள் ராஜேஸ்வரியின் வீட்டுக்கு அருகே வெகு நேரம் பதுங்கி இருந்து இருக்கலாம் என்றும் தனது மனைவியின் அருகில் படுத்திருந்த கணவர் சீனிவாசன் குளிர் காரணமாக வீட்டுக்குள் சென்று படுத்து தூங்கிய பிறகே அப்பகுதியில் பதுங்கி இருந்தவர்கள் இந்த கொலை– கொள்ளையில் ஈடுபட்டு இருப்பதும் தெரிய வந்தது.
ராஜேஸ்வரியை கொன்று நகையை கொள்ளையடித்து சென்றவர்களை பிடிக்க தனிப்படையினர் தீவிரம் காட்டி வருகிறார்கள்.
சம்பவ இடத்தில் கிடைத்த கைரேகைகளை வைத்து பழைய குற்றவாளிகளின் கைரேகையுடன் ஒப்பிட்டு பார்த்து வருகிறார்கள். மேலும் இரவு நேர ரோந்து பணியும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
சந்தேகப்படுபவர்களை பிடித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள் இன்னும் ஓரிரு நாட்களில் இந்த கொலையில் துப்பு துலங்கும் என எதிர் பார்க்கப்படுகிறது.
Average Rating