செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் குழந்தை கடத்தல்: 2 மணி நேரத்தில் போலீசார் மீட்டு தாயிடம் ஒப்படைப்பு!!

Read Time:3 Minute, 45 Second

97bcc43b-0f93-40e5-a402-09c3175ed399_S_secvpfசெங்கல்பட்டு சிங்கபெருமாள் கோவில் குளக்கரை தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன். தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி லதா (25).

இவர் பிரசவத்திற்காக கடந்த 12–ந்தேதி செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அறுவை சிகிச்சை மூலம் அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.

நேற்று காலை 10 மணி அளவில் 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் பிரசவ வார்டிற்கு வந்தார். அந்த மர்ம பெண் லதாவிடம் பேசினார். அந்த பெண் தனது உறவினரின் குழந்தையை பார்க்க வந்ததாக கூறினார்.

பின்னர் லதா அந்த பெண்ணிடம் தனது குழந்தையை பார்த்துக்கொள்ளுமாறு சொல்லி விட்டு கழிவறைக்கு சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது அந்த பெண்ணையும் லதாவின் குழந்தையும் காணவில்லை.

இதுகுறித்து லதா மருத்துவமனை செவிலியர்கள், ஊழியர்களிடம் விசாரித்தார். அப்போது அவர்கள் உங்களிடம் பேசிய பெண்தான் குழந்தை எடுத்து சென்றார் என்று கூறினர்.

உடனே இதுகுறித்து செங்கல்பட்டு டவுன் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் இதுகுறித்து அங்கு உள்ள ஆட்டோ நிறுத்தத்தில் விசாரித்தனர்.

அப்போது ஒரு ஆட்டோ டிரைவர் ஒரு பெண்ணை குழந்தையுடன் இப்போதுதான் திருமணி குளக்கரையில் விட்டு வந்ததாக கூறினார். இதைத் தொடர்ந்து போலீசார் திருமணி குளக்கரைக்கு ஜீப்பில் விரைந்து சென்றனர். அங்கு குழந்தையுடன் நடந்து சென்ற பெண்ணை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்தான் லதாவின் குழந்தையை கடத்தியது தெரிய வந்தது.

போலீசார் அவரை கைது செய்தனர். கடத்தப்பட்ட குழந்தை லதாவிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும் அந்த மர்ம பெண்ணிடம் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில் சிங்க பெருமாள் கருநிலம் கடம்புரை சேர்ந்த காமாட்சி (30) என்பதும் இவருக்கு திருமணம் ஆகி குழந்தை இல்லை என்று தெரிய வந்தது.

இதுகுறித்து காமாட்சி கூறியதாவது:–

முதல் கணவர் ஏழுமலை குழந்தை இல்லாத காரணத்தினால் என்னை விட்டு சென்று விட்டார். இதனால் நான் பெருமாள் என்பவரை 2–வது திருமணம் செய்து திருமணி குளக்கரையில் வசித்து வந்தேன். குழந்தை இல்லாத காரணத்தினால் பெருமாளும் என்னை விட்டு சென்று விடுவாரே என்ற எண்ணத்தில்தான் குழந்தையை கடத்தினேன். குழந்தையை விற்கும் நோக்கில் கடத்தவில்லை. வளர்க்கும் நோக்கில்தான் கடத்தினேன் என்று காமாட்சி போலீசில் கூறினார். இதைத்தொடர்ந்து செங்கல்பட்டு டவுன் போலீசார் காமாட்சியை செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கோவையில் ¼ பவுன் தங்க கம்மலுக்காக 3 வயது சிறுமி கடத்தல்!!
Next post வாலிபரை சுட்டுக்கொன்ற வழக்கு: கைதான சப்–இன்ஸ்பெக்டர் மதுரை சிறையில் அடைப்பு!!