பள்ளியில் சேருவதற்காக பைக்கில் சென்றபோது சாலையோர மரம் விழுந்து 16 வயது சிறுமி பலி!!
Read Time:1 Minute, 10 Second
கேரள மாநிலம், கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள கண்ணூர் பகுதியை சேர்ந்தவர் நஹட்டா (16). அப்பகுதியின் அருகாமையில் உள்ள வாலப்பட்டினம் மேல்நிலைப் பள்ளியில் சேருவதற்காக தனது உறவினரான பைசல் (25) என்பவருடன் இவர் இருசக்கர வாகனத்தில் இன்று சென்று கொண்டிருந்தார்.
நாரத் என்ற பகுதி வழியாக சென்றபோது மாலை 3.30 மணியளவில் சாலையோர மரம் திடீரென சரிந்து இவர்கள் சென்று கொண்டிருந்த வாகனத்தின் மீது விழுந்தது. மரத்தின் அடியில் சிக்கி பலத்த காயமடைந்த நஹட்டாவையும், பைசலையும் அவ்வழியாக வந்தவர்கள் மீட்டு, கண்ணூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நஹட்டா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
Average Rating