காணாமல் போன பூசாரியின் மனைவி கற்பழிக்கப்பட்ட நிலையில் பிணமாக கண்டெடுப்பு!!
உத்தரப்பிரதேசத்தில் உள்ள முசாபர் நகர் மாவட்டத்தில் நேற்று காணாமல் போன கோவில் பூசாரியின் மனைவி கற்பழிக்கப்பட்ட நிலையில் அரை நிர்வாண கோலத்தில் இன்று பிணமாக கண்டெடுக்கப்பட்டார்.
இங்குள்ள ராஜ்புடனா மஜ்ரா கிராமத்தில் இருக்கும் ஒரு கோவில் பூசாரியின் மனைவியான சுமார் 35 வயது அந்தப் பெண் நேற்று மாலை வீட்டை விட்டு வெளியே சென்றார். இரவு வெகுநேரமாகியும் வீடு திரும்பாததால் அவரது கணவரான பூசாரி சர்தாவால் பகுதி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
இதுதொடர்பாக, போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடிவந்த நிலையில் ராஜ்புடனா மஜ்ரா கிராமத்தில் உள்ள ஒரு வயல் வெளியில் இன்று அரை நிர்வாண கோலத்தில் அவர் பிணமாக கண்டெடுக்கப்பட்டார். அவரது உடலில் இருந்த காயங்களை வைத்து பார்க்கையில் கற்பழிப்புக்கு பின்னர் கழுத்தை நெறித்து அவர் கொல்லப்பட்டிருக்கலாம் என சந்தேகப்படும் போலீசார், அந்த பிரேதத்தை பரிசோதனைக்கு அனுப்பிவைத்து கொலையாளிகளை தேடி வருகின்றனர்.
Average Rating