கோவில்பட்டியில் ஆசிரியையிடம் பண மோசடி: தே.மு.தி.க. கவுன்சிலர் கைது!!
Read Time:1 Minute, 4 Second
கோவில்பட்டி ராஜூவ்நகர் 6–வது தெருவை சேர்ந்தவர் அந்தோணி. இவரது மனைவி பிரேமா (வயது 48). அங்குள்ள பஞ்சாயத்து யூனியன் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். கோவில்பட்டி அருகே உள்ள ஆர்.வெங்கடேசபுரத்தை சேர்ந்தவர் உதயகுமார் (40). கோவில்பட்டி ஒன்றியத்தின் 9–வது வார்டு கவுன்சிலராக உள்ளார்.
இந்நிலையில் உதயகுமார் கடந்த சில மாதங்களுக்கு முன்பு, பிரேமாவிடம் ரூ.5 லட்சம் கடன் வாங்கினார். அந்த பணத்தை நீண்ட நாட்களாகியும் பிரேமாவுக்கு, உதயகுமார் திருப்பி கொடுக்கவில்லை. இது குறித்து பிரேமா கோவில்பட்டி மேற்கு போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி உதயகுமாரை கைது செய்தனர்.
Average Rating