பிரதமர் மோடியின் தூய்மை இந்தியா திட்டத்தை ஆதரிக்கும் வெளிநாட்டு யானையின் சமூக பொறுப்புணர்வு: அட்டகாச வீடியோ!!
பிரதமர் நரேந்திர மோடி தூய்மை இந்தியா திட்டத்தை அறிவித்து எட்டு மாதங்கள் ஆகிவிட்டன. இந்த திட்டத்தை கடந்த காந்தி ஜெயந்தி அன்று மோடி துவக்கி வைத்து, அதற்கான விளம்பர தூதுவர்களாக சிலரை அவர் தேர்வு செய்தார். அவர்கள் எல்லாம் தத்தமது பகுதியில் துடைப்பமும் கையுமாக ஒரேயொரு முறை கேமராக்களுக்கு போஸ் கொடுத்ததுடன் தங்களது கடமை முடிந்து விட்டதாக கருதி, வாடிக்கையான தொழிலை கவனிப்பதில் மட்டுமே அக்கறை செலுத்தி வருகின்றனர்.
ஆனால், காட்டையொட்டியுள்ள தனிமையான குடியிருப்பு பகுதியில் சுற்றிவரும் ஒரு யானை அங்குள்ள புல் தரையில் காணப்படும் குப்பையை பொறுக்கி, அருகாமையில் உள்ள குப்பைத் தொட்டியில் போடும் காட்சியை காணும்போது, யானைகளுக்கு மதிநுட்பம் மட்டுமல்ல.., சமூகப் பொறுப்புணர்வும் மனிதர்களை விட சற்று அதிகம்தான், என்றே எண்ணத் தோன்றுகின்றது.
அந்த அரிய காட்சி, உங்கள் பார்வைக்காக மட்டும் வீடியோ இணைப்பாக..,
Average Rating