முன்னாள் பொலிஸ் அதிகாரி குலசிறிக்கு எதிரான வழக்கு பிற்போடப்பட்டுள்ளது!!
Read Time:1 Minute, 21 Second
புலனாய்வு தகவல்களை வௌியிட்டதாக குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் குலசிறி உடுகம்பொலவுக்கு எதிரான வழக்கு விசாரணைகள் பிற்போடப்பட்டுள்ளன.
குறித்த வழக்கு இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன்போது, வழக்கு விசாரணைகளுக்காக வேறொரு தினத்தை வழங்குமாறு வழக்கறிஞர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதனையடுத்து குறித்த வழக்கு விசாரணைகளை செப்டம்பர் 22ம் மற்றும் 30ம் திகதிகளில் நடத்த கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி தேவிகா தென்னக்கோன் உத்தரவிட்டுள்ளார்.
2001ம் ஆண்டு அதுருகிரிய – மிலேனியம் பகுதி வீட்டு சூழலில் இருந்த இராணுவ புலனாய்வுப் பிரிவு தொடர்பில், தகவல் வௌியிட்ட குற்றச்சாட்டில் முன்னாள் உதவிப் பொலிஸ் அத்தியட்சகருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Average Rating