திருவனந்தபுரம் அருகே செல்போனை சார்ஜ் செய்தபடி பேசிய பெண் மின்சாரம் பாய்ந்து பலி!!
Read Time:59 Second
திருவனந்தபுரம் அருகே வெளியநாடு பகுதியை சேர்ந்தவர் சந்துகுட்டன். இவரது மனைவி லினிமோள் (வயது 38) இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
கணவர் வேலைக்கு சென்றிருந்தார். பிள்ளைகளும் பள்ளிக்கு சென்றிருந்தனர். இந்த நிலையில் லினிமோள் தனது செல்போனை சார்ஜ் செய்துகொண்டிருந்தபோது அவருக்கு செல்போன் அழைப்பு வந்தது. இதனால் அவர் சுவிட்சை ஆப் செய்யாமல் செல்போனில் பேசினார்.
இதனால் அவர் மீது மின்சாரம் பாய்ந்து அலறினார். அவரது சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு சென்று பார்த்தபோது லினிமோள் இறந்துகிடந்தார். இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Average Rating