கொடைக்கானல் அருகே பெண்ணை கொன்று நகை கொள்ளையடித்த கும்பல்!!

Read Time:1 Minute, 53 Second

8ac7380f-99a0-46d4-99ce-285771eb1095_S_secvpfகொடைக்கானல் அருகே உள்ள கவுஞ்சி ராஜபுரத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். மளிகை வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி வீரலட்சுமி (வயது 41). இவர்களது மகன் பரமேஸ்வரன்.

பிளஸ்–2 முடித்துள்ள இவரை என்ஜினீயரிங் கல்லூரியில் சேர்ப்பதற்காக அவரது தந்தை நேற்று முன்தினம் சென்னை அழைத்து சென்றார். வீட்டில் வீரலட்சுமி மட்டும் தனியாக இருந்தார்.

நேற்று காலை வெகுநேரமாகியும் அவரது வீடு திறக்கப்படாததால் அக்கம் பக்கத்தினர் சந்தேகம் அடைந்தனர். இதுபற்றி போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் வந்து கதவை உடைத்து திறந்து பார்த்தபோது வீரலட்சுமி இறந்து கிடந்தார். உடல் பாதி எரிந்திருந்தது. காதில் ரத்த காயம் இருந்தது.

வீட்டில் இருந்த 20 பவுன் நகை, ரூ.10 ஆயிரம் ரொக்க பணம் ஆகியவை திருடு போயிருந்தது. இதனால் மர்ம நபர்கள் வீரலட்சுமியை கொலை செய்துவிட்டு நகை, பணத்தை கொள்ளையடித்து சென்றிருக்கலாம் என்று போலீசார் சந்தேக்கின்றனர்.

சம்பவம் குறித்து அறிந்ததும் சென்னை சென்றிருந்த பாலகிருஷ்ணன் மகனுடன் உடனடியாக வீடு திரும்பினார். தனது மனைவி சாவில் சந்தேகம் இருப்பதாக அவர் கொடைக்கானல் போலீசில் தெரிவித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகிறார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கேலி செய்ததை எதிர்த்ததால் இளம்பெண்ணை 35 தடவை கத்தியால் குத்தி கொன்ற அண்ணன்–தம்பி கைது!!
Next post ஒடுகத்தூர் அருகே தற்கொலைக்கு முயன்ற காதலிக்கு தாலி கட்டிய வாலிபர்!!