போலி விசா மூலம் கட்டார் ஊடாக இத்தாலி செல்ல முற்பட்டவர் சிக்கினார்!!
Read Time:55 Second
போலி விசாவைப் பயன்படுத்தி கட்டார் ஊடாக இத்தாலிக்கு செல்ல முற்பட்ட இலங்கையர் ஒருவர் கட்டார் அதிகாரிகளால் இலங்கைக்கு மீண்டும் திருப்பி அனுப்பிவைக்கப்பட்டுள்ளார்.
இதன்படி இவர் இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
பின்னர் இவரை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் சந்தேகநபர் இளவாளை பகுதியைச் சேர்ந்த 23 வயதான ஒருவர் எனத் தெரியவந்துள்ளது.
இவரை நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Average Rating