எந்தவொரு கட்சியாலும் 90 க்கு அதிகமான ஆசனங்களை பெற முடியாது!!
Read Time:1 Minute, 13 Second
யார் யார் என்னதான் கூறினாலும் இந்த முறை பொதுத் தேர்தலில் போட்டியிடுகின்ற எந்தவொரு கட்சியும் 90 ஆசனங்களுக்கு அதிகமாக பெறுவதில்லை என்று தேசிய தொழிற்சங்க மையத்தின் தலைவர் கே.டி. லால்காந்த தெரிவித்துள்ளார்.
ஆகவே அதி கூடிய ஆசனங்களை பெறக் கூடிய கட்சிகள் மற்றைய கட்சிகளுடன் கூட்டு சேர்ந்து தேசிய அரசாங்கம் ஒன்றை அமைக்கும் என்று கே.டி. லால்காந்த தெரிவித்துள்ளார்.
இன்று நாரஹேன்பிட்டியில் இடம்பெற்ற இலங்கை ஆசிரியர் சங்கத்தின் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அத்துடன் ஜேவிபி யிற்கு மாத்திரமே எதிர்க்கட்சியின் பொறுப்பை சரியாக நிறைவேற்ற முடியும் என்றும் கே.டி. லால்காந்த தெரிவித்துள்ளார்.
Average Rating