நல்லாட்சி குறித்து கேள்வியெழுப்புகிறார் திலங்க சுமதிபால!!

Read Time:1 Minute, 32 Second

200312111Thilankaஅமைதியான மற்றும் நியாயமான தேர்தல் ஒன்றை நடாத்துவதாக தேர்தல்கள் ஆணையாளர் வாக்குறுதியளித்துள்ள நிலையில் கொழும்பு நகரில் பயங்கரமான ஒரு சூழ்நிலையை உருவாக்குவற்கு ரவி கருணாநாயக்க முயற்சிப்பதாக திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார்.

இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

கடந்த காலங்களில் பாதாள உலக கோஷ்டியினரை இல்லாதொழிக்கும் நடவடிக்கைகளை தமது அரசாங்கம் மிகவும் அமைதியான முறையில் முன்னெடுத்திருந்ததாக அவர் தெரிவித்தார்.

நேற்று ப்ளூமெண்டல் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவமானது தெட்டத் ததௌிவான தேர்தல் சட்ட மீறல் நடவடிக்கை என்றும் இதுதானா நல்லாட்சி என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

இப்பொழுது கொழும்பு நகரத்திற்கும் பயங்கரவாதம் பரவியுள்ளதாகவும், ஐக்கிய தேசிய கட்சியின் ஆதரவுடனே இந்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாகவும் திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நாணயசுழற்சியில் இலங்கை அணி வெற்றி!!
Next post இன்றைய போட்டிக்கு விஷேட பாதுகாப்பு!!