சஜின் வாசுக்கு பிணை வழங்க நீதிமன்றம் மறுப்பு!!
Read Time:1 Minute, 12 Second
ஜனாதிபதி செயலகத்தில் இருந்த வாகனங்கள் தவறாக பயன்படுத்தப்பட்டமை தொடர்பில், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஜின்வாஸ் குணவர்த்தனவுக்கு பிணை வழங்க கொழும்பு மேல் நீதிமன்றம் மறுத்துள்ளது.
சஜின்வாஸ் குணவர்த்தனவுக்கு ஏற்பட்டுள்ள சுகவீனம் காரணமாக பிணை வழங்குவது குறித்து பரிசீலனை செய்யுமாறு, அவரது வழக்கறிஞர்கள் கோரிக்கை விடுத்தனர் என எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.
எது எவ்வாறு இருப்பினும் குறித்த கோரிக்கை நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது.
அந்த மனுவில் பிணை வழங்குமளவுக்கு சுகவீன பிரச்சினைகள் குறித்து உள்ளடக்கப்படவில்லை என, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி பத்மினி ரணவககுணதிலக சுட்டிக்காட்டியுள்ளார்.
Average Rating