விடுதலைப்புலி உறுப்பினர்கள் 06 பேர் இந்தியாவில் கைது!!
Read Time:1 Minute, 22 Second
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த 6 பேர் இந்தியாவின் கொல்கத்தாவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொல்கத்தாவின் சாந்தினி சவுக் பகுதியில் அம்மாநில சிறப்பு அதிரடிப்படையினர் இவர்கள் 6 பேரையும் கைது செய்துள்ளனர்.
இவர்கள் 6 பேரும் ஈழத் தமிழர்கள். இவர்களில் இருவர் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் சிரேஷ்ட உறுப்பினர்கள் என்று இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
இவர்கள் அனைவரும் சென்னையில் இருந்து ரயில் மூலம் கொல்கத்தாவுக்கு சில நாட்களுக்கு முன்பே வந்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட 06 பேரிடமும் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
அண்மையில் தமிழகத்தில் அடுத்தடுத்து சில விடுதலைப் புலிகள் கைது செய்யப்பட்டிருந்தனர். இந்த கைது நடவடிக்கையில் சிக்காமல் தப்பியவர்களா இவர்கள் என்பது குறித்தும் விசாரிக்கப்பட்டு வருகிறது.
Average Rating