புலிகளுக்கு நிதி வழங்கியிருந்தால்.., 3 வருடங்களில் அவர்­க­ளுக்கு முடி­வு­கட்ட முடியுமா? -மஹிந்­த­ ரா­ஜ­பக்ஷ!!

Read Time:18 Minute, 21 Second

timthumb (8)பாரா­ளு­மன்றத் தேர்­தலில் நாம் 117 ஆச­னங்­களைப் பெற்று ஆட்சி அமைப்போம். தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பு மற்றும் ஜே.வி.பி. ஆகிய கட்­சி­க­ளுடன் ஒன்­றி­ணைந்து தேசிய அர­சாங்கம் அமைக்­கப்­படும் என்று ஐக்­கிய தேசி­யக்­கட்சி கூறி­ய­தி­லி­ருந்து அவர்கள் பெரும்­பான்­மையைப் பெறப்­போ­வ­தில்­லை­யென்­பதை ஏற்­றுக்­கொண்­டமை நிரூ­பிக்­கப்­பட்­டுள்­ளது என்று முன்னாள் ஜனா­தி­ப­தியும் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் குரு­ணாகல் மாவட்ட வேட்­பா­ள­ரு­மான மஹிந்­த­ ரா­ஜ­பக்ஷ தெரி­வித்தார்.

விடு­த­லைப்­பு­லி­க­ளுக்கு யார் ஆயுதம், பணம் வழங்­கி­னார்கள் என்­பது உங்­க­ளுக்கு தெரியும். 2005ஆம் ஆண்டு நான் புலி­க­ளுக்கு நிதி வழங்­கி­யி­ருந்தால் மூன்று வரு­டங்­களில் அவர்­களை முடிப்­ப­தற்­கான சந்­தர்ப்பம் கிடைத்­தி­ருக்­காது.

சமஷ்­டிக்­ கோ­ரிக்­கைக்கு நாம் இணங்­கப் ­போ­வ­தில்லை. மாகா­ண­ச­பை­களின் அதி­கா­ரங்­களை அதி­க­ரிப்­ப­தா­யினும் அது குறித்து பாரா­ளு­மன்­றத்தில் கலந்­து­ரை­யா­ட­ வேண்டும். அர­சி­ய­ல­மைப்பு மாற்­றப்­ப­ட­ வேண்டும் என்றும் அவர் கூறினார்.

கொழும்பு ஜே ஹில்ட்டன் ஹோட்­டலில் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்­த­ரா­ஜ­பக்ஷ தலை­மை­யி­லான ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியில் அங்கம் வகிக்கும் கட்சி தலை­வர்கள் ஊடக நிறு­வ­னங்­களின் பிர­தா­னிகள், தேசிய பத்­தி­ரி­கை­களின் ஆசி­ரி­யர்­களை சந்­தித்து கலந்­து­ரை­யா­டினர். இதன்­போதே முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்­த­ரா­ஜ­பக்ஷ இவ்­வாறு தெரி­வித்தார்.

இந்த சந்­திப்பில் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் செய­லாளர் சுசில் பிரே­ம­ஜ­யந்த, சுதந்­தி­ரக்­கட்­சியின் செய­லாளர் அநு­ர­பி­ரி­ய­தர்­ஷன யாப்பா, தலை­வர்­க­ளான விமல் வீர­வன்ச, தினேஷ்­கு­ண­வர்த்­தன, ஜி.எல். பீரிஸ், ரிரான் அலஸ், ரஜீவ விஜ­ய­சிங்க, உட்­பட பலரும் கலந்து கொண்­டனர்.

இங்கு மஹிந்­த­ரா­ஜ­பக்ஷ மேலும் தெரி­வித்­த­தா­வது:-

2005 ஆம் ஆண்டு எம்­மிடம் நாட்டை ஒப்­ப­டைத்த போது நாடு எப்­படி இருந்­தது என்­பது உங்­க­ளுக்குத் தெரியும் 2015 ஆம் ஆண்டு நாட்டை மீளவும் நான் ஒப்­ப­டைக்கும் போது யுத்­தத்­திற்கும் முடி­வைக்­கண்டு சமா­தா­னத்தை ஏற்­ப­டுத்தி நாட்டை முன்­னேற்­றப்­பா­தையில் ஒப்­ப­டைத்தேன்.

கடந்த ஆறு மாத­கா­லத்தில் நாடு பின்­னோக்கிச் சென்­றுள்­ளது.

கேள்வி:- ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி தேர்­தலில் வெற்­றி­பெற்று ஆட்சி அமைக்­குமுா?

பதில்:- நாம் 117 ஆச­னங்­களை கைப்­பற்ற முடியும் என்ற நம்­பிக்கை உள்­ளது. 113 ஆச­னங்­க­ளுக்கு மேல் நாம் எப்­ப­டியும் பெற்று ஆட்சி அமைப்போம்.

கேள்வி:- 2005 ஆம் ஆண்டு ஜனா­தி­பதி தேர்­தலின் போது விடு­த­லைப்­பு­லி­க­ளுக்கு நீங்கள் நிதி வழங்­கி­ய­தாக குற்றம் சாட்­டப்­ப­டு­கின்­றது. இதன் உண்­மைத்­தன்மை என்ன?

பதில்:- விடு­தலைப் புலி­க­ளுக்கு நான் நிதி வழங்­கி­யி­ருந்தால் மூன்று வரு­டங்­களில் அவர்­க­ளுக்கு முடி­வு­கட்ட சந்­தர்ப்பம் ஏற்­பட்­டி­ருக்­காது.

நான் நிதி வழங்­கி­ய­தாக ரணி­லுக்கு பிர­பா­க­ரன்தான் கூறி­யி­ருக்­க­வேண்டும். தற்­போது பிர­பா­கரன் இல்­லா­ததால் அதனை கேட்க முடி­யாது.

விடு­த­லைப்­பு­லிகள் ஆரம்­பித்த காலம் முதல் நான் பாரா­ளு­மன்­றத்தில் அங்கம் வகித்­தவன். புலி­க­ளுடன் அண்­மித்­தி­ருந்­த­வர்­க­ளுக்கு என்ன நடந்­தது என்­பது எனக்குத் தெரியும்.

நாம் அவர்­க­ளுடன் இரு­த­ட­வைகள் பேசு­வ­தற்கு முனைந்தோம். ஆனால் அவர்கள் மாவி­லாறு யுத்­தத்தை ஆரம்­பித்­த­தனர். இதனால் அவர்­களை முடித்தோம். யுத்­தத்தை ஆரம்­பிக்­க­வேண்டாம் என்று நான் அவர்­க­ளிடம் கேட்­டுக்­கொண்­டி­ருந்தேன். அவர்கள் அத­னையும் மீறி ஆரம்­பித்­தனர். அதனால் முடித்­து­விட்டேன்.

புலி­க­ளுக்கு ஆயுதம் பணம் கொடுத்­த­வர்கள் யார் என்­பது உங்­க­ளுக்குத் தெரியும். இந்­திய அமை­திப்­ப­டைக்­கா­லத்தில் அவர்­க­ளுக்கு எதி­ராக யுத்தம் செய்­த­தற்­காக ஆயு­தங்கள் நிதி உத­விகள் எவ்­வ­ளவு வழங்­கப்­பட்­டது என்­பது தொடர்பில் அனை­வ­ருமே அறிந்­துள்­ளனர்.

கேள்வி:- நீங்கள் தேர்­தலில் வெற்­றி­பெற்று பிர­த­ம­ரானால் மூன்று மாதங்­களில் வில­கி­வி­டு­வீர்கள் என்று கூறப்­ப­டு­கின்­றதே?

பதில்:- யார் அப்­படி சொன்­னது? உங்­க­ளது சொல்­லி­ருந்து நான் பிர­த­ம­ராவேன் என்­பது நீங்கள் ஏற்­றுக்­கொள்­வது தெரி­கின்­றது.

கேள்வி:- ஐக்­கிய தேசி­யக்­கட்சி தேசிய அர­சாங்கம் அமைக்­கப்­போ­வ­தாக தெரி­வித்­துள்­ளது. இது குறித்து உங்­களின் கருத்­தென்ன?

பதில்:- ஐக்­கிய தேசி­யக்­கட்­சியின் கூற்­றி­லி­ருந்து அவர்­க­ளுக்கு பெரும்­பான்மை கிடைக்­காது என்­பது நிரூ­ப­ன­மா­கின்­றது. நாம் பெரும்­பான்மை பலத்தைப் பெற்று வெற்­றி­பெ­றுவோம்.

ஐக்­கிய தேசி­யக்­கட்­சி­யா­னது தமிழ்­தே­சி­யக்­கூட்­ட­மைப்­பு­டனும், ஜே.வி.பி.யுடனும் இணைந்து ஆட்சி அமைக்­க­வுள்­ள­தாக கூறு­கின்­றது. இதி­லி­ருந்து அவர்­க­ளுக்கே அவர்கள் மீது நம்­பிக்கை இல்லை என்­பது தெரி­கின்­றது. தோல்­வியை ஏற்­றுக்­கொண்­ட­மை­யி­னா­லேயே அவர்கள் கூறு­கின்­றனர்.

இதன் போது விமல் வீர­வன்ச கருத்துத் தெரி­விக்­கையில்:-

தேர்­தலில் பெரும்­பான்­மையைப் பெறும் கட்­சியே ஆட்சி அமைக்க முடியும் என்று 19 ஆவது திருத்­தத்தில் தெளி­வாக குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. இதனால் ரணில் ஆட்­சி­யினை உரு­வாக்க முடி­யாது என்று தெரி­வித்தார்.

கேள்வி:- 10 வரு­டங்­க­ளாக ஜனா­தி­ப­தி­யாக இருந்­த­போது செய்ய முடி­யா­ததை தற்­போது செய்­ய­வுள்­ள­தாக தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தில் நீங்கள் குறிப்­பிட்­டி­ருக்­கின்­றமை பொய்­யென்று ஆளும் தரப்பில் கூறப்­ப­டு­கின்­றதே?

பதில்:- 2005 ஆம் ஆண்டு நாம் 300 ரூபா­விற்கு உரம் வழங்­குவோம் என்று வாக்­கு­றுதி வழங்­கினோம். அப்­போது அதனை எல்­லோரும் பொய்­யென்­றனர். ஆனால் அதனை நாம் செய்து காட்­டினோம்.

கேள்வி:- சந்­தி­ரிக்கா குமா­ர­துங்க பிர­சார மேடை­களில் உங்­களை கடு­மை­யாக தாக்­கி­வ­ரு­கின்­றாரே?

பதில்:- எவ­ரைத்தான் அவர் தாக்­க­வில்லை. அவர் குறித்து நான் பேசு­வ­தற்கு விரும்­ப­வில்லை.

இந்தக் கேள்­விக்கு பதி­ல­ளித்த ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் செய­லாளர் சுசில் பிரே­ம­ஜந்த சந்­தி­ரிக்கா குமா­ர­துங்க தனது ஆட்­சிக்­கா­லத்தில் ஒரு வருட நீடிப்பை மேற்­கொள்­வ­தற்கு முயன்றார்.

ஆனால் அது முடி­ய­வில்லை. 2005 ஆம் ஆண்டு ஜனா­தி­பதி தேர்­த­லிலும் அவர் மறை­மு­க­மாக ரணி­லுக்­குத்தான் ஆத­ரவு கொடுத்தார். ஆகவே இது­வொரு புதிய விட­ய­மல்ல என்று தெரி­வித்தார்.

கேள்வி:- அப்­ப­டி­யானால் சந்­தி­ரிக்கா குமா­ர­துங்­கவை ஏன் கட்­சியில் தொடர்ந்தும் வைத்­தி­ருக்­கின்­றீர்கள்?

பதில்:- இப்­போது அதனை சர்ச்­சை­யாக்க விரும்­ப­வில்லை. அவர் இருந்­தாலும் ஒன்­றுதான் இல்­லா­விட்­டாலும் ஒன்­றுதான்.

கேள்வி:- நீங்கள் தேர்­தலில் வெற்­றி­பெற்று பிர­த­ம­ரானால் ஜனா­தி­ப­தி­யுடன் எவ்­வாறு செயற்­ப­டு­வீர்கள்?

பதில்:- நல்ல இணக்­கத்­துடன் செயற்­ப­டுவேன்.

.கேள்வி:- உங்­களைப் பிர­த­ம­ராக ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன நிய­மிக்­கா­மல்­விட்டால் ?

பதில்: அதனை 18 ஆம் திகதி பார்த்­துக்­ கொள்வோம்.

கேள்வி:- தேர்­தலில் உங்­க­ளது அணி வெற்­றி­பெற்ற பின்னர் மறு­த­ரப்­பிற்கு பல உறுப்­பி­னர்கள் மாறி­வி­டு­வார்கள் என்று கூறப்­ப­டு­கின்­றதே?

பதில்:- அப்­ப­டி­யான சந்­தேகம் எமக்­கில்லை. அப்­படி யாரும் போவ­தாக தெரி­ய­வில்லை.

கேள்வி:- நீங்கள் தேர்­தலில் வெற்­றி­பெற்று பிர­த­ம­ரானால் மஹிந்த சிந்­தனை தொட­ருமா?

பதில்:- அது அப்­ப­டியே இருக்கும் கடந்த ஆறு மாத காலத்தில் மக்­களின் பிரச்­சினை குறித்து ஆராய்ந்தே தற்­போ­தைய தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தை நாம் வெளி­யிட்­டுள்ளோம். மஹிந்த சிந்­த­னை­யி­லுள்ள நல்ல விட­யங்­களை அமுல்­ப­டுத்­துவோம்.

கேள்வி:- ஆட்­சிக்கு வந்தால் சமஷ்­டியை அமுல்­ப­டுத்­து­வீர்­களா?

பதில்:- எமது தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தில் அது குறித்து நாங்கள் தெரி­வித்­துள்ளோம். ஒற்­றை­யாட்­சிக்குள் தீர்வு காணப்­ப­ட­வேண்டும் என்­பதே எமது நிலைப்­பாடு.

கேள்வி:- மாகா­ண­ச­பை­க­ளுக்கு அதிக அதி­காரம் கேட்டால் வழங்­கு­வீர்­களா?

பதில்:- இது குறித்து பாரா­ளு­மன்­றத்தில் பேச்­சு­வார்த்தை நடத்­தப்­பட்டு தீர்­மானம் எடுக்­கப்­ப­ட­வேண்டும். இத­னையே கருத்தில் கொண்­டுதான் எனது ஆட்­சிக்­கா­லத்தில் நான் பாரா­ளு­மன்றத் தெரி­வுக்­கு­ழுவை அமைத்தேன். ஆனால் அந்தத் தரப்­பி­லி­ருந்து எவரும் பேச்­சுக்கு வர­வில்லை. பாரா­ளு­மன்­றத்தில் கலந்­து­ரை­யாடி அர­சி­யல்­யாப்பை மாற்­ற­வேண்­டி­யது அவ­சியம்.

கேள்வி:- ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி ஆட்­சியில் பெரு­ம­ளவு ஊழல் இடம் பெற்­ற­தா­கவும், நிதி புல­னாய்வு பிரிவு அதனை விசா­ரிப்­ப­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. இதனை நீங்கள் எதிர்க்­கின்­றீர்­களா?

பதில்:- விசா­ர­ணைகள் இடம் பெறு­வதை நாம் எதிர்க்­க­வில்லை. பொலிஸார், பொலிஸார் போன்று செயற்­ப­ட­வேண்டும். இத­னை­வி­டுத்து பிர­தமர் அலு­வ­ல­கத்­தினால் தெரி­விக்­கப்­படும் முறைப்­பா­டுகள் குறித்து மட்டும் விசா­ரிப்­பது அர­சியல் உள்­நோக்கம் கொண்ட விடயம் என்­பதே எனது கருத்­தாகும்.

கேள்வி:- றகர் விளை­யாட்டு வீரர் தாஜு­தீனின் கொலை தொடர்­பான விசா­ரணை குறித்து உங்­களின் நிலைப்­பாடு என்ன?

பதில்:- விசா­ர­ணை­யா­னது சுயா­தீ­ன­மா­ன­தாக இடம்­பெ­ற­வேண்டும். சரி­யான தக­வல்கள் மக்­க­ளுக்கு வழங்­கப்­ப­ட­வேண்டும். ஆனால் இந்த விட­யத்தை தேர்தல் காலத்தில் அர­சியல் நலன்­க­ருதி செய்­வ­தா­கவே தெரி­கின்­றது.

கேள்வி:- தாஜு.தீனின் படு­கொலை விட­யத்தில் ஜனா­தி­பதி பாது­காப்புப் பிரிவைச் சேர்ந்த மூவர் தொடர்­பு­பட்­டுள்­ள­தாக அமைச்­ச­ர­வையின் பேச்­சாளர் ராஜித சேர­னா­ரட்ண கூறி­யுள்­ளாரே?

பதில்:- அர­சியல் நலன்­க­ருதி இத்­த­கைய குற்­றச்­சாட்­டுக்கள் சுமத்­தப்­ப­டு­கின்­றன. எமது கையில் இரத்தம் பட­வில்லை. இந்த விடயம் குறித்து உரிய விசா­ரணை நடத்­தப்­ப­ட­வேண்டும். ஆனால் முன்­னைய விசா­ர­ணை­யினை பார்க்கும் போது என்ன நடந்­தி­ருக்­கின்­றது என்­பது தெரி­கின்­றது.

கேள்வி:- தமிழ், முஸ்லிம் சிறு­பான்­மை­யினர் உங்­க­ளி­ட­மி­ருந்து தூர­வி­ல­கி­யி­ருப்­ப­தாக கரு­த­கின்­றீர்­களா?

பதில்:- அவ்­வாறு கூற முடி­யாது. மத வாதத்தைப் பயன்­ப­டுத்தி திட்­ட­மிட்ட வகையில் பொய்ப்­பி­ர­சா­ரங்­களை மேற்­கொண்டு இவ்­வா­றான நிலை உரு­வாக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது.

நோர்­வேக்கு சென்­றவர் யார்? அமெ­ரிக்­கா­விற்கு சென்­றவர் யார்? அதன் மூலம் என்ன நடந்­தது என்­ப­வற்றை நாம் அறிந்­துள்ளோம். முஸ்லிம் மக்கள் தற்­போது உண்­மையை உணர்ந்தால் மனம் மாறு­வார்கள். முஸ்லிம் மக்கள் தற்­போது உண்­மையைப் புரிந்­துள்­ளனர்.

இந்தக் கேள்­விக்கு பதி­ல­ளித்த சுசில் பிரே­ம­ஜ­யந்த நாம் யாழ்ப்­பா­ணத்தில் அங்­கஜன் ராம­நா­தனை முதன்மை வேட்­பா­ள­ராக நிய­மித்­துள்ளோம். கடந்த மாகா­ண­சபைத் தேர்­தலில் அவர் எமது கட்­சியின் சார்பில் வெற்­றி­பெற்­றி­ருந்தார்.

இதேபோல் வன்­னியில் எமது முதன்மை வேட்­பா­ள­ராக ஹுனைஸ் பாரூக் போட்­டி­யி­டு­கின்றார். கிழக்கில் ஹிஸ்­புல்லா, பிள்­ளையான், அதா­வுல்லா, மலை­ய­கத்தில் ஆறு­முகன் தொண்­டமான் தலை­மை­யி­லான குழு­வி­னரும் கொழும்­பிலும் எமது பட்­டி­யலில் சிறுபான்மையினரும் இடம் பெற்றுள்ளனர்.

கேள்வி:- உங்களது ஆட்சிக்காலத்தில் அரச ஊடகங்கள், அரசாங்கத்திற்கு ஆதரவாகவே செயற்பட்டன. தற்போது அரச ஊடகங்கள் எவ்வாறு செயற்படுகின்றன. ?

பதில்: அரசாங்கத்திற்கு ஆதரவாகவே செயற்படுகின்றன. தற்போது தனியார் ஊடகங்களையும் பிடித்து வைத்துள்ளனர்.

கேள்வி:- உங்களது அமைச்சரவையில் அமைச்சர்களுக்கு சுதந்திரம் இல்லை என்று குற்றம் சாட்டப்பட்டது. ஜனகபண்டார தென்னக்கோன் இதனை அழுது அழுது கூறியிருந்தார். இதன் உண்மைத்தன்மை என்ன?

பதில்:- அவ்வாறு இல்லை. இப்போது அவர் மாறி அழுகின்றார்.

கேள்வி:- ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட போது மைத்திரிபால சிறிசேனவும் இக்கருத்தினை கூறியிருந்தாரே?

பதில்:- அரசியலில் போட்டியிடும் போது இவ்வாறு பலதையும் கூறுவார்கள்.

கேள்வி:- உங்களது சலூன் கதவுகள் திறந்துள்ளதாக அடிக்கடி கூறுவீர்கள் 17 ஆம் திகதிக்குப் பிறகும் உங்களது சலூன் கதவு திறந்திருக்குமா?

பதில்:- சிலவேளை திறந்திருக்கும்

கேள்வி:- தேர்தலில் பாராளுமன்ற உறுப்பினராகிய போதிலும் ஐக்கிய தேசியக்கட்சி அமைத்தால் நீங்கள் பாராளுமன்றத்தில் அங்கம் வகிப்பீர்களா?

பதில்:- 18 ஆம் திகதி அப்படி வராது….

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உடல் பருமனை குறைக்க உதவும் வெள்ளரி அல்வா..!!
Next post 15 மாத மத்திய ஆட்சியில் ஒரு பைசா கூட ஊழல் இல்லை: பிரதமர் மோடி உரை!!