களுவாஞ்சிக்குடியில் 154 புதிய முறைப்பாடுகள்!!
Read Time:54 Second
காணாமல் போனோர் தொடர்பாக விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு மட்டக்களப்பு – களுவாஞ்சிக்குடி பிரதேச செயலகத்தில் இன்று இரண்டாவது நாளாக தமது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.
நேற்றையதினம் 178 முறைப்பாடுகள் குறித்த வாய் மொழி மூல சாட்சியங்கள் பெறப்பட்டுள்ளன.
மேலும் களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் நேற்று 154 புதிய முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதேவேளை இன்றையதினம் 315 முறைப்பாடுகளுக்கு அழைப்புக் கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளதாக, ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
Average Rating