யோகேஸ்வரன் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு கடிதம்!!
மட்டக்களப்பு மாவட்டத்தில் கமநல சேவைத் திணைக்களத்தினால் வழங்கப்பட்டுள்ள விவசாய ஆராய்ச்சி உதவியாளர் நியமனத்தில் 75 சிங்களவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களை அவர்களுடைய மாவட்டத்திற்கு மாற்றி தமிழ் பேசும் சமூகத்தினரை இங்கு நியமிக்குமாறு கோரி தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
கடந்த அரசாங்கத்தினால் விவசாய ஆராய்ச்சி உதவியாளர் நியமனத்துக்கான போட்டிப் பரீட்சை நடாத்தப்பட்டு நீண்ட காலத்தின் பின் தற்போது நியமனம் வழங்கப்பட்டதாக அறிகின்றேன்.
இவ்வேளை இந்நியமனம் மட்டக்களப்பு மாவட்டத்தில் 21 தமிழர்களுக்கும், 75 சிங்களவர்களுக்கும், 3 முஸ்லிம்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. இதில் 75 சிங்களவர்களும் வடக்கு கிழக்கு சாராத வெளி மாகாணத்தை சேர்ந்தவர்கள். அத்தோடு வட மாகாணத்தில் வழங்கப்பட்ட 361 விவசாய ஆராட்சி உதவியாளர் நிமயனத்தில் 29 பேர் மாத்திரமே தமிழர்கள். அதிலும் முல்லைத்தீவு, மன்னார் மாவட்டங்களில் இருந்து எவரும் நியமிக்கப்படவில்லை.
தற்போது தங்கள் தலைமைத்துவத்தின் கீழ் உள்ள நல்லாட்சி இந்நாட்டில் உள்ள அனைத்து இன மக்களின் அடிப்படை உரிமைகளையும் பாதுகாப்பதாக அமைந்துள்ள நிலையில் வடக்கு கிழக்கு மக்களை முக்கியமாக கருத்தில் கொண்டு நடாத்தப்பட்ட இப்போட்டிப் பரீட்சையில் வெளி மாகாணத்தை சேர்ந்த 75 சிங்கள சகோதர சகோதரிகள் உள்வாங்கப்பட்டமை வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் பேசும் மக்களின் தொழில் ரீதியான உரிமையை பறிப்பதாக அமைந்துள்ளது.
எனவே தயவு செய்து தற்போது வழங்கப்பட்டுள்ள விவசாய ஆராய்ச்சி உதவியாளர் நியமனத்தில் உள்வாங்கப்பட்ட வெளி மாவட்டங்களை சேர்ந்த 75 உத்தியோகதர்களையும், அவர்களது பகுதிக்கு இடமாற்றி விட்டு இவ்விடத்திற்கு வடக்கு கிழக்கு பகுதியில் தமிழ் பேசும் சமூகத்துக்கு பெரும்பான்மையாகவும், அத்தோடு வடக்கு கிழக்கு பகுதியில் ஏனைய சமூகத்துக்குமாக இவ் உத்தியோகத்தை வழங்கி உதவுமாறு அன்பாக வேண்டுகின்றேன்.
தங்களது அன்பும், ஆதரவும் இந்நடவடிக்கை சார்பாக கிடைக்கும் என எதிர்பார்க்கின்றேன் என அக்கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating