யாழில் பாரிய விபத்து – பலர் காயம்!!
Read Time:1 Minute, 16 Second
இன்று காலை பருத்திதுறையில் இருந்து யாழ்ப்பாணத்தை நோக்கிச் சென்ற தனியார் மினிபஸ் ஒன்றும், யாழ்ப்பாணத்தில் இருந்து அச்சுவேலி நோக்கி சென்ற லொறி ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்து எற்பட்டுள்ளது.
இச்சம்பவம் இன்று காலை அச்சுவேலி ஆவரங்கால் சந்திக்கு அருகாமையில் இடம்பெற்றுள்ளது.
வேகக்கட்டுப்பாடுகளை மீறி வாகனம் செலுத்தப்பட்டதனால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக பொஸிசார் தெரிவிக்கின்றனர்.
இதன் போது லொறியில் காணப்பட்ட பலசரக்கு பொருட்கள் முற்றாக சேதம் அடைந்துள்ளன.
இதன் போது தனியார் மினிபஸ்ஸில்பயணித்த 23 பேர் காயமடைந்து யாழ்ப்பாணம் போதான வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொஸிசார் தெரிவிக்கின்றனர்.
இதுதொடர்பாக விசாரணை பொஸிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
Average Rating